யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நேபாளத்தில் யர்சகும்பா என்ற அரியவகை மூலிகையைத் தேடி மக்கள் கூட்டமாக மலையேற்றம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை இஸ்ரேல் ஈரான் போரைத் தொடர்ந்து இஸ்ரேலை விட்டு யூதர்கள் வெளியேறியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ஒரே வாரம் தான் 70 வருடங்களாக வாழவைத்த பூமியை விட்டு கோலன் குன்று ஏற துவங்கி விட்டான் யூதன். ஆனால் ஈரான் கொடுத்த தண்டனை என்று சொல்வதை விட ஏக இறைவன் கொடுத்த மிகப்பெரிய தண்டனை
இன்னும் இருக்கு, இன வெறி பிடித்த யூதனுக்கு..
விரிவான விளக்கம்
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்கும் மேலாக நீடித்த நிலையில், போர் தொடர்பான காட்சிகள் தற்போது வரை பல செய்திகளாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், போரில் ஈரான் கொடுத்த தண்டனையால், 70 வருடங்களாக தாங்கள் வாழ்ந்த இஸ்ரேல் நாட்டை விட்டு யூதர்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவில் மக்கள் பலரும் கூட்டமாக மலையேறி செல்வதை தெளிவாகக் காண முடிகிறது.
மிஞ்சி போனால் 8 நாள் ஈரான் தாக்குதலுக்கே தாக்கு பிடிக்காமல் பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள்
பல லட்சம் பேர் உயிர்களை இழந்து, காயங்கள் பட்டு, சிறையில் அடைப்பட்டு உணவு உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தங்களது நாட்டிற்காக வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு ராயல் சல்யூட் pic.twitter.com/xznPdo0Kg9
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, நேபாள நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
“Thecurrentnepal” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 01 அன்று பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு, “டோல்பாவின் ருப்பாட்டனில் யர்சகும்பாவைத் தேடும் கூட்டம்" என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர். மேலும் அதில் ""இமயமலை வயக்ரா" என்றும் அழைக்கப்படும் “யர்சகும்பா”, நேபாளத்தின் உயரமான இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு அரிய மூலிகையாகும். இது கம்பளிப்பூச்சியை ஒரு வகை பூஞ்சை தாக்கும் போது வளரும். மேலும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இது சேகரிக்கப்படுகிறது“ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதே போன்று, “routineofnepalbanda” என்ற ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு, இது நேபாளத்தில் உள்ள டோல்பா மக்கள் கூட்டமாக “யர்சகும்பா” என்ற மூலிகையை தேடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் நேபாளத்தில் யர்சகும்பா என்ற அரியவகை மூலிகையைத் தேடி மக்கள் கூட்டமாக மலையேற்றம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை இஸ்ரேல் ஈரான் போரைத் தொடர்ந்து இஸ்ரேலை விட்டு யூதர்கள் வெளியேறியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், போரில் ஈரான் கொடுத்த தண்டனையால், 70 வருடங்களாக தாங்கள் வாழ்ந்த இஸ்ரேல் நாட்டை விட்டு யூதர்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ, நேபாள நாட்டில் “யர்சகும்பா” என்ற மூலிகையை தேடி மக்கள் கூட்டமாக சென்றபோது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.