YouTurn

நீட் தேர்வில் தேர்ச்சியான வடநாட்டு கண் மருத்துவர் என ட்ரோலாகும் புகைப்படம்.. உண்மை என்ன ?

நீட் தேர்வில் தேர்ச்சியான வடநாட்டு கண் மருத்துவர் என ட்ரோலாகும் புகைப்படம்.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்.



Facebook link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாடு இருந்து வருவதால் நீட் தேர்வு தொடர்பான மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதுண்டு. அவற்றில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கண் மருத்துவர் என நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் மருத்துவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





இப்புகைப்படம் கடந்த 2018-ல் இருந்தே வைரல் செய்யப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ட்ரோல் செய்யும் வகையில் இப்புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது. எனினும், புகைப்படத்தின் பின்னணியை அறியாமலேயே தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

மருத்துவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் புகைப்படம் இங்கு எப்படி நீட் தேர்வில் தேர்ச்சியான மருத்துவர் என வைரல் ஆகியதோ, அதே புகைப்படம் 2018-ல் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இடஒதுக்கீட்டால் படித்த மருத்துவர் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கிறது.

இதற்காக 2018-ல் Medical Students Diaries  எனும் முகநூல் பக்கத்தில், " சில நாட்களுக்கு முன்பாக, மருத்துவர் ஒருவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்திருக்கும் புகைப்படம் முகநூலில் வைரலானது. "ஆர்பிட்டல் ஆஸ்கல்டேஷன் " என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையை அறியாததால், சாதாரண மக்கள் மட்டுமல்ல நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட பகிர்ந்து உள்ளனர் மற்றும் அவர்களின் கல்வியறிவின்மை மற்றும் குறைந்த ஆராய்ச்சி திறன்களின் சான்று என புகைப்படத்தை காண்பித்து கேலி செய்தனர் " எனப் பதிவிடப்பட்டு இருக்கிறது.



Facebook link 

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசுகையில், " இது Orbital auscultation எனும் நடைமுறை. சில ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு வருகிறது " எனத் தெரிவித்து இருந்தார்.



முடிவு : 

நம் தேடலில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர் என மருத்துவர் நோயாளியின் கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதிக்கும் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு உள்ளது. இது Orbital auscultation எனும் மருத்துவ நடைமுறை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க