யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஏழை ஆதி திராவிடர் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பரவிய செய்தி
‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் அனைத்து தரப்பு பெண்கள் பயன்பெறலாம்.
விரிவான விளக்கம்
‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ குறித்து ‘Finance with Harish’ என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் பேசிய இன்பூலுயன்ர், ‘இத்திட்டத்தின் கீழ் முதன்முதலில் நிலம் வாங்கும் பெண்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிலம் இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தில் முதல் முறையாக வீடு கட்ட விருப்பும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். அதன்படி வீடு கட்டுவதற்காக மானியம் வழங்கப்படும்’ என்று பேசியுள்ளார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவலை இணையத்தில் தேடினோம். ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் (TAHDCO)’ வலைத்தளத்தில் இதுபற்றி காணமுடிந்தது.
அதன்படி, ‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ என்பது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதை அறிந்து கொள்கிறோம். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் நபர் பட்டியல் சமூக பெண்ணாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விவசாய நிலம் எதையும் உடமையாக வைத்திருக்கக்கூடாது. அதேவேளை அவரது தொழில் விவசாயம் சார்ந்ததாக இருக்கவேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலம் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவருடைய நிலமாக இருக்கக்கூடாது என்பதும் நிபந்தனை. அதாவது, நிலத்தை விற்பவர் கண்டிப்பாக பட்டியல் சமூகத்தை சேராதவராக (Non SC/ST) இருக்கவேண்டும்.
அதேபோல, ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறும் மானியத்தை ‘தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி’யின் வழகாட்டு நெறிமுறைகளின் படி கிணறு வெட்டவும், பாசனத்திற்காக மின்சார மோட்டார் பொருத்தவும் வசதி செய்து கொள்ள பயன்படுத்தலாம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு கட்டிக்கொள்ளலாம் என்று சொல்லப்படவில்லை.
இதிலிருந்து, இந்த திட்டம் பட்டியல் சமூகம் பெண்களுக்காக (ஆதி திராவிடர்) மட்டும் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதும் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக மானியம் பெறமுடியாது என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
ஆதி திராவிடர் மக்கள் (SC/ST) மட்டும் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை பொதுவான திட்டம் என்றும் அதன் கீழ் வீடு கட்ட மானியம் கிடைக்கும் என்றும் தவறாக பரப்பி வருகிறார்கள்.