யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு கோயில்களில் வழங்கும் ரசீதுகளில் இந்துசமய அறநிலையத்துறையின் இலச்சினைக்கு பதிலாக முருகனின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
முருக பகதர்கள் மாநாடு சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பவன் கல்யாண் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறார், அவர் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் கோவில்களில் வழங்கப்படும் ரசீதுகளில் முருகன் படம் இடம்பெற்றுள்ளதை பாருங்கள் என்று கூறி இரண்டு ரசீதுகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ஒப்பீடு செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தினை ஆய்வு செய்து பார்த்ததில், முதலில் இருப்பது திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வழங்கப்பட்ட ரசீது என்பதை, ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவிலின் பெயர் மற்றும் கோவிலின் எண் (TM001596) ஆகியவற்றைக் கொண்டு உறுதிபடுத்த முடிந்தது.
அதே போன்று இரண்டாவது ரசீதையும் ஆய்வு செய்ததில், அது சென்னை வடபழநி முருகன் கோயிலில் வழங்கப்பட்ட ரசீது என்பதை அறிய முடிந்தது.
இந்நிலையில் இருவேறு கோவில்களின் ரசீதுகளை ஒன்றாக இணைத்து, ஒரே கோவிலின் ரசீது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு வடபழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்ட ரசீதை ஆய்வு செய்ததில், மாநாடு நடைபெறுவதற்கு முன்பு இருந்தே அங்கு வழங்கப்படும் ரசீதுகளில் முருகன் படம் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு கோயில்களில் வழங்கும் ரசீதுகளில் இந்துசமய அறநிலையத்துறையின் இலச்சினைக்கு பதிலாக முருகனின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
