YouTurn

அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் தாக்கியதாக பரவும் தவறான புகைப்படங்கள் !

அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் தாக்கியதாக பரவும் தவறான புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் பெல்ட்டால் அடித்து, மிதிப்பதாக பரவும் புகைப்படங்கள் !

விரிவான விளக்கம்

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை போலீஸ் பெல்டால் அடித்து, காலால் மிதித்து கொடூரமாக தாக்கியதாக இரு புகைப்படங்கள் இந்திய அளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Twitter Archive link 

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் கெளரவ் கோயல் என்பவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது உண்மையாக இருந்தால் மகாராஷ்டிரா அரசு அழிவு நாளை வேண்டுகிறது எனக் குறிப்பிட்டு இவ்விரு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.



உண்மை என்ன ?

மும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அன்வே நாயக் என்பவர் 2018-ல் தற்கொலை செய்து கொண்ட போது எழுதி வைத்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் நேற்று(நவம்பர் 4-ம் தேதி) கைது செய்து அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகின. கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் அர்னாபை போலீஸ் இழுத்து சென்ற காட்சி செய்திகளில் வெளியாகின. ஆனால், போலீஸ் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம்சாட்டி இருந்தார்.


இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் கொடூரமாக தாக்கியதாக இரு புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவ்விரு புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜனவரி 10-ம் தேதி நியூஸ் 18 இணையதளத்தில் " Legs Held Up, Shoe on Face, Belt Buckle Beating: On Cam, UP Police's Punishment for 'Phone Thief' " எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இப்புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.



உத்தரப் பிரதேசத்தின் தேவ்ரியா மாவட்டத்தில் செல்போனை திருடிய நபரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஷூ காலால் மிதித்து, பெல்ட்டால் அடித்து கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாகியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link


Bar & Bench எனும் யூடியூப் சேனலில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் கைது செய்த முழு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடியதாக கூறப்படும் நபரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கிய காட்சியை மும்பை போலீஸ் அர்னாபை தாக்கிய காட்சிகள் என தவறாக பரப்பி வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க