YouTurn

துருக்கி அரசு பிரதமர் மோடிக்கு தபால்தலை வெளியிட்டதா ?

துருக்கி அரசு பிரதமர் மோடிக்கு தபால்தலை வெளியிட்டதா  ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி நாட்டில் தபால்தலை வெளியிட்டு உள்ளதாகவும், இதனைக் கண்டு இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டதை காண முடிந்தது. இதே போன்று, அஸ்ஸாம் மாநில பிஜேபியின் ட்விட்டர் பக்கத்திலும், " இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால்தலை...

பரவிய செய்தி

பெருமைப்படும் தருணம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால்தலை வெளியிட்டு, இந்நேரத்தில் உலகின் சிறந்த தலைவருக்கு மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளனர்.

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி நாட்டில் தபால்தலை வெளியிட்டு உள்ளதாகவும், இதனைக் கண்டு இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டதை காண முடிந்தது.



இதே போன்று, அஸ்ஸாம் மாநில பிஜேபியின் ட்விட்டர் பக்கத்திலும், " இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால்தலை வெளியிட்டு உள்ளனர். இது உலகின் தலைச் சிறந்த தலைவர்களில் ஒருவரான நம் பிரதமருக்கு கிடைத்த மரியாதை " என 2018 டிசம்பர்-ல் பதிவிட்டு இருந்தனர்.

2015 நவம்பர் 15-ம் தேதி துருக்கியின் G20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள  உலக நாடுகளின் பிரதிநிதிகளாக அந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். G20 மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களின் உருவம் பொறித்த தபால்தலையை எர்டோகன் வழங்கினார்.



பிரதமர் மோடிக்கு துருக்கி நாட்டில் தபால்தலை வெளியிட்டது உண்மை என்றாலும், அவருக்காக மட்டும் வெளியிடவில்லை. இந்திய பிரதமர் உடன் சேர்த்து அமெரிக்க, கனடா, ரஷ்யா உள்ளிட்ட தலைவர்களையும் உள்ளடக்கிய 33 தபால்தலையை வெளியிட்டனர்.

மேலும், சில பதிவுகளில் கூறுவது போன்று உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என பிரதமர் மோடியை எங்கும் குறிப்பிடவில்லை.  துருக்கி பணமதிப்பில்  2.80 லிரா வுடன், பிரதமர் மோடியின் படம், இந்திய கொடி, இந்திய குடியரசின் பிரதமர் ஆகியவை அந்த தபால்தலையில்  இடம்பிடித்துள்ளது.

சுருக்கமாக

துருக்கியில் G20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை சிறப்பிக்க அந்நாடு தபால்தலைகளை வெளியிட்டனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.