YouTurn

மோடி காந்தியையும், கோட்சேவையும் வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

மோடி காந்தியையும், கோட்சேவையும் வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இப்ப சொல்லுங்க, இவங்களுக்கு நம்ம ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க...? இங்கே மகாத்மா காந்திக்கும் ஒரு கும்பிடு, சுட்டு கொன்ற கோட்சேவுக்கும் ஒரு கும்பிடு..!!!? நாடு வெளங்கிடும்...!!


விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியையும் வணங்குகிறார், அவரைக் கொன்ற கோட்சேவையும் வணங்குகிறார் என மேற்காணும் புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதை பார்க்க நேரிட்டது.



Facebook link | archive link 



Facebook link | archive link

பிரதமர் மோடி கோட்சேவை வணங்குவதாகக் கூறி வதந்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இப்படி பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது கோட்சே அல்ல, சாவர்க்கர். இது குறித்து தேடுகையில், 2018 டிசம்பர் 30-ம் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அறைக்கு சென்றதாக புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.



Twitter link | archive link

2018-ல் பிரதமர் அந்தமான் தீவிற்கு சென்று சாவர்க்கர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல், பிஎம்ஓ இந்தியா யூடியூப் சேனலில் பிரதமர் மோடி அந்தமானின் செல்லுலார் சிறைக்கு சென்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.





2018-ல் அந்தமான் செல்லுலார் சிறைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கு சாவர்க்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கு முன்பாக, பிரதமர் மோடி சாவர்க்கரின் சிலைக்கு முன்னால் வணங்கும் புகைப்படமும் கோட்சே உடையது என தவறாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மோடி காந்தியை கொன்ற கோட்சேக்கு மாலை அணிவித்து வணங்கினாரா ?

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி காந்தியை வணங்கிவிட்டு, அவரைக் கொன்ற கோட்சேவையும் கொன்றதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது சாவர்க்கர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க