YouTurn

பிரதமர் மோடிக்காக 365 நாட்களும் உழைக்கும் புகைப்பட கலைஞர் எனப் பரவும் எடிட் படம் !

பிரதமர் மோடிக்காக 365 நாட்களும் உழைக்கும் புகைப்பட கலைஞர் எனப் பரவும் எடிட் படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒரு நாளைக்கு 18-20 மணி நேரம் என ஆண்டிற்கு 365 நாட்களும் உழைக்கும் நபர்.. மோடி புகைப்பட கலைஞர் !!



Twitter link 

விரிவான விளக்கம்

புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்த நிலையில் பிரதமர் மோடி நடந்து செல்வதை புகைப்படம் எடுப்பதாகவும், பிரதமருக்காக 365 நாட்களும் இந்த புகைப்பட கலைஞர் உழைப்பதாகவும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

பிரதமர் நரேந்திர மோடி கேமரா மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மக்களை சந்தித்து கையசைத்து கொண்ட காரில் செல்லும் போது அவரை சுற்றிப் புகைப்பட கலைஞர் காரில் தொங்கிய நிலையில் புகைப்படம் எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, பிரதமர் மோடி கேமராவில் இருந்து தன்னை மறைப்பவர்களை நகர்த்தும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க : பிரதமர் மோடிக்காக அதிகம் உழைக்கும் புகைப்படக் கலைஞர்கள்.. வைரல் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது ?

இதற்கிடையில், பிரதமர் மோடியை தரையில் படுத்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடிப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், " 2021 அக்டோபர் 2ம் தேதி Siaset எனும் செய்தி இணையதளத்தில் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருந்தது நமக்கு கிடைத்தது.



2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ நரேந்திர மோடி ட்விட்டர் பக்கம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.



Twitter link 



கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தி சுற்றி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் இருந்து புகைப்படம் எடுப்பது போன்று எடிட் செய்து உள்ளனர்.



மேலும் படிக்க : பிரதமர் மோடியின் ஃபோட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்ட பீட்டர் அல்போன்ஸ் !

இதற்கு முன்பாகவும், பிரதமர் மோடியை புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இந்திய அளவில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்த நிலையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுப்பதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க