YouTurn

இளம் வயதில் நரேந்திர மோடி வீட்டை விட்டு விரட்டப்பட்டதாக பரவும் வதந்தி !

இளம் வயதில் நரேந்திர மோடி வீட்டை விட்டு விரட்டப்பட்டதாக பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 18 ஆவது வயதில் ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறி மூன்று ஆண்டுகள் இமயமலையில் தங்கியதாக கூறுவதுண்டு. ஆனால், மோடி ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறவில்லை, வீட்டில் இருந்து நகையை திருடியதால் விரட்டியடிக்கப்பட்டார் என அவரின் சகோதரர் பிரஹலாத் மோடி பேட்டி ஒன்றில்...

பரவிய செய்தி

மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை. நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம் - பிரஹலாத் மோடி ( நரேந்திர மோடியின் சகோதரர்).

விரிவான விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 18 ஆவது வயதில் ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறி மூன்று ஆண்டுகள் இமயமலையில் தங்கியதாக கூறுவதுண்டு. ஆனால், மோடி ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறவில்லை, வீட்டில் இருந்து நகையை திருடியதால் விரட்டியடிக்கப்பட்டார் என அவரின் சகோதரர் பிரஹலாத் மோடி பேட்டி ஒன்றில் கூறியதாக சமூக வலைத்தளத்தில் பரவின.



இத்தகைய கருத்தை மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி அமர் உஜாலா என்ற செய்தி அளித்த பேட்டியில் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவின. தமிழகத்தில் பரவியதை போன்று வட இந்தியாவில் பெரிய வைரல் ஆகி இருந்தன.

ஆனால், 2016 ஆம் ஆண்டிலேயே பிரஹலாத் மோடி அளித்த பேட்டி என பரவியதை வதந்தி என இணைய செய்திகளில் வெளியாகின. மோடியின் சகோதரரும் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். அப்படியொரு பேட்டியே அளிக்கவில்லை என கூறினார். இது மூன்று ஆண்டுகள் பழைய வதந்தியே !



அமர் உஜாலா என்று இணைய பக்கத்தின் பெயரில் பரவியதற்கு அவர்களே மறுப்பு தெரிவித்து இருந்தனர். அவ்வாறான, செய்திகளை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்பு செய்தியை 2016 ஜூன் 2-ம் பதிவிட்டனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.