
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்நிலையில், நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்பதற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியுள்ளதாகவும், நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு எனக் கூறுவதாக செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அது என்ன பணம் வாங்க மட்டும் மத்திய அரசு..!!
பழி போடும்போது மட்டும் ஒன்றிய அரசு..??? pic.twitter.com/4bfTghLCmB
— தனி ஒருவன் 🇮🇳 (@ThaniOruvan_BJP) November 19, 2021
Archive link

உண்மை என்ன ?
Have requested Hon'ble @PMOIndia to direct @MORTHIndia to issue requisite notifications declaring eight State Highway roads in TN which connect major pilgrimage, trade and tourist centres as National Highways as they need immediate improvement. pic.twitter.com/swoyvlyo1k
— M.K.Stalin (@mkstalin) November 18, 2021
Twitter link
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து தேடுகையில், பிரதமர் மோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து கடிதம் எழுதிய செய்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், " ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் " என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்த போதும் சில ஊடக செய்திகளில் வழக்கம் போல் மத்திய அரசு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், தற்போது முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஆங்கிலத்தில் Union Government எனக் குறிப்பிட்டதை செய்தி நிறுவனங்கள் மத்திய அரசு என்று எழுதி உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசிற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. செய்தி நிறுவனமே மத்திய அரசு எனக் குறிப்பிட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.
