YouTurn

ஜெர்மனியில் புறாவுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவளித்தது குறித்து பரவும் செய்தி.. உண்மை என்ன?

ஜெர்மனியில் புறாவுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவளித்தது குறித்து பரவும் செய்தி.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜெர்மனியின் பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்களில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகள் காரணமாக புறாக்கள், கடற்பறவைகள், நீர்ப்பறவைகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பறவைகளுக்கு உணவளிப்பதை தடை செய்துள்ளனர். இவற்றில் குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டுமே அடங்கும். ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை.

பரவிய செய்தி

ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு போட்ட தமிழ்நாட்டு முதல்வர் ஜேர்மன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்டார்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியைச் சென்றடைந்தார். 


ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு செல்லும் முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு போட்ட முதல்வர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் புறாக்களுக்கு உணவிடுவதை தெளிவாகக் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு ஜெர்மன் நாட்டில் புறாக்களுக்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், ஜெர்மனியின் பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்களில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகள் காரணமாக புறாக்கள், கடற்பறவைகள், நீர்ப்பறவைகள், வாத்து, மீன்கொத்திகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பறவைகளுக்கு உணவளிப்பதை தடை செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. குறிப்பாக இவற்றில் Hamburg, Stuttgart, Braunschweig, Munich, Cologne, Dortmund மற்றும் Frankfurt am Main போன்ற நகரங்கள் அடங்கும். மேலும் இதற்கு அபராதமாக 5000 யூரோக்கள் வரை வசூலிக்கப்படுகின்றன. 



மேலும் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனியில் எந்த நகரத்தில் புறாக்களுக்கு உணவளித்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. 



இந்நிலையில் ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது போன்று பலரும் தவறான செய்தியை திரித்துப் பரப்பி வருகிறனர். 


முடிவு: 


நம் தேடலில், ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை. ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க