YouTurn

மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும் தானா? ஆதவ் அர்ஜூனா கூறும் தவறான தகவல்!

மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும் தானா? ஆதவ் அர்ஜூனா கூறும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2024 அக்டோபரில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார்.

பரவிய செய்தி

“இந்தியாவிலேயே... மாரத்தானில் பங்கேற்று மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்; வேறு எந்த முதலமைச்சரும் ஓடியதில்லை; நம்ம முதலமைச்சர் போல் தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது” - அமைச்சர் ஆதல் அர்ஜுனா.


image.png


Link / Archive Link


Link 

விரிவான விளக்கம்

இன்று (26/06/2026) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ‘Start Run Stop Drugs'  என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு 3 கி.மீ வரை ஓடினார். 


இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘இந்தியாவிலேயே மாரத்தானில் பங்கேற்று மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்; வேறு எந்த முதலமைச்சரும் ஓடியதில்லை' என்று குறிப்பிட்டார். 




உண்மை என்ன? 


இந்தியாவில் முதலமைச்சர்கள் மாரத்தான் போட்டியில் ஓடியது குறித்து இணையத்தில் தேடினோம். ‘India Today’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியாகி இருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 



2024 அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘காஷ்மீரில் நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கலந்துகொண்டார். 13 நாடுகளில் இருந்து வந்த 2000 வீரர்களுடன் சேர்ந்து 54 வயதான முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை ஓடினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



‘Times of India’ செய்தித்தளமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது. ‘2024 அக்டோபர் மாதம் காஷ்மீரில் நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஓமர் அப்துல்லா அரை மாரத்தான் என்று சொல்லக்கூடிய 21 கி.மீ வரை ஓடினார்’ என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முடிவு:


காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார் என்பது தெரியாமல், 3 கி.மீ வரை மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும் தான் என்று தவறான தகவலை கூறியுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க