YouTurn

மீரா மிதுன் சீமானை விமர்சித்து ஜாமின் கேட்டதாக பரப்பப்படும் போலிச் செய்தி !

மீரா மிதுன் சீமானை விமர்சித்து ஜாமின் கேட்டதாக பரப்பப்படும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சீமான் போன்ற பொறுக்கிகளை எல்லாம் வெளியில் நடமாடவிடுகிறீர்கள் எனக்கு மட்டும் ஜாமீன் தர மறுப்பதா என நீதிபதி முன்பு மீரா மிதுன் கதறல். தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

நடிகை மீரா மிதுன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நீதிபதியிடம் தனக்கு ஜாமின் கேட்டதாக புதிய தலைமுறையின் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.





உண்மை என்ன ?

மீரா மிதுன் பட்டியல் சமூகத்தினரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் பல புகார்கள் அவர் மேல் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை போலீசார் மீரா மிதுனை கைது செய்தனர். மீரா மிதுன் மீது 4 வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், " அடுத்தடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் மனதளவில் டார்ச்சர் செய்கிறார்கள் என்று நீதிபதி முன்பு மீரா மிதுன் கதறி அழுதார். அதையடுத்து, மீரா மிதுன் சார்பில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர் " என நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

செப்டம்பர் 3-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், " தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நடிகை மீரா மிதுன் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் " என்றே நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டில் மீரா மிதுன் சீமானை விமர்சித்தது போன்று எடிட் செய்து வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.



முடிவு : 

நம் தேடலில், சீமானை விமர்சித்து மீரா மிதுன் நீதிபதியிடம் ஜாமின் கேட்டதாக பரப்பப்படும் புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க