YouTurn

செய்தியாளர்களைச் சந்திக்காத மோடி என மேயர் பிரியா கூறினாரா ?

செய்தியாளர்களைச் சந்திக்காத மோடி என மேயர் பிரியா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள்.

மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்கவேண்டும்!



Archive twitter link

விரிவான விளக்கம்

பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை இதுவரையில் எத்தனை முறை சந்தித்து உள்ளார் என பாஜகவினர் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் கூறியதாக சன் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



https://twitter.com/INCmanikandan/status/1591811799049179136

Archive twitter link



Twitter link 

மேயர் இவ்வாறு பேசியதற்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், எதிராக பாஜகவினரும் கமெண்ட் செய்து பரப்பி வருகின்றனர்.  

உண்மை என்ன ?

பரப்பப்படும் சன் நியூஸ் கார்டில்  எழுத்துக்கள் உள்ள பகுதியினை பார்க்கையில் இது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது. மேலும், இது குறித்து சன் நியூஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் தேடினோம். அப்பக்கங்களில் அத்தகைய நியூஸ் கார்டுகள் எதுவும் பதிவிடப்படவில்லை.



பிரதமர் மோடி குறித்து மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பிலோ அல்லது அவரது டிவிட்டர் பக்கத்திலோ ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா எனத் தேடியதில் அத்தகைய பதிவுகள் எதுவும் இல்லை என அறிய முடிந்தது.



Press meet video link

முன்னதாக, நவம்பர் 12ம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திரு.வி.க.நகர் மண்டலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் மேயர் பேசியதாவது, சாலையோரம், நீர்நிலை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கொசு வலை வழங்கப்படுகிறது. இதற்காக இரண்டரை இலட்ச கொசு வலைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

அவர் பேசுகையில் ஒரு இடத்தில் மட்டும் கொசு வலை வழங்கும் திட்டம் என்பதற்கு பதிலாக “கொசு வழங்கும் திட்டம்” எனக் கூறிவிட்டார். அந்த ஒரு இடத்தினை தவிர்த்து மற்ற இடங்களில் கொசு வலை வழங்கும் திட்டம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1591319824059469824

ஆனால், மேயர் தவறுதலாகக் கொசு வழங்கும் திட்டம் எனக் கூறியதை மட்டும் கிண்டல் செய்து பாஜகவை சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதற்கு மேயர் பதிலளிக்கும் விதமாக மோடி செய்தியாளர்களைச் சந்தித்தாரா ? என எடிட் செய்யப்பட்ட சன் நியூஸ் கார்டினை திமுக மற்றும் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மோடி செய்தியாளர்களைச் சந்தித்தது உண்டா எனப் பேசியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது. மேலும், மேயர் பிரியா பிரதமர் மோடி குறித்து அவ்வாறு பேசவில்லை என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க