YouTurn

இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைப்பு எனப் பரவும் தவறான செய்தி!

இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைப்பு எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப் படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்டாசாவின் வீடு.

பரவிய செய்தி

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்து என்பதால் வீட்டில் தீ யை வைத்த இஸ்லாமியர்கள். திருந்துங்கடா நாளைக்கு நமக்கும் இந்நிலைமை தானா? இந்தியாவில இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கும்வரைதான் மதசார்ப்பற்ற நாடு என்று சொல்வார்கள் சிறுபான்மையினர். எப்போது அவர்கள் பெரும்பான்மை ஆகிட்டோம் என்று நினைக்கிறார்களோ அப்பவே இந்த நாட்டை அவர்களின் மதம் சார்ந்த நாடா மாற்றிவிடுவார்கள். அவ்வளோ மதவெறி அவர்களுக்கு..! அவர்கள் இரத்தத்திலையே மதவெறி எந்தளவுக்கு ஊறிப்போய் இருக்கிறது என்பதை இந்த காட்சி நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. 

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 04) ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 91 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு இன்னும் பதற்றநிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீட்டுக்கு இஸ்லாமியர்கள் தீ வைத்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்தததில், வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் இந்து என்பதால் அவருடைய வீட்டுக்கு இஸ்லாமியர்கள் தீ வைத்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் புகைப் படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் (Mashrafe Bin Mortaza) வீடு என்பதையும் அறியமுடிந்தது. 

வங்கதேசத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பியாக மஷ்ரஃபே பின் மோர்டாசா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளரான அவருடைய வீட்டுக்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்துள்ளனர். மாவட்ட பரிஷத் தலைவர் வக்கீல் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மாவட்ட அவாமி லீக் பொதுச்செயலாளர் நிஜாம் உதீன் கான் நிலு ஆகியோரின் வீடுகளையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர் என்பதை ‘Tbs News’ தனது பக்கத்தில் “மஷ்ரஃபின் நரைல் வீடு இடிக்கப்பட்டு, தீவைக்கப்பட்டது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் மூலம் அறியமுடிந்தது. மேலும் அதில் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீட்டின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

இதே போன்று ‘Dhaka Tribune‘ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நரைல்-2 தொகுதியின் எம்.பி.யான மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் வீட்டைத் தீ வைத்து எரித்தனர்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதிலும் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள வீட்டின் முன்புறம் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் வீடு எரிக்கப்பட்டதை,  கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாகக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக சிலர் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க