
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தரையில் நிற்கும் மனிதர் கைகளை அசைப்பதற்கு ஏற்ப வானில் இருக்கும் பறவைகள் கூட்டமாய் ஒவ்வொரு வடிவத்திற்கு மாறிக் கொண்டே இருப்பதை கீழ்காணும் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ கடந்த ஆண்டில் இருந்தே " பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் " என்கிற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை பார்க்க...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தரையில் நிற்கும் மனிதர் கைகளை அசைப்பதற்கு ஏற்ப வானில் இருக்கும் பறவைகள் கூட்டமாய் ஒவ்வொரு வடிவத்திற்கு மாறிக் கொண்டே இருப்பதை கீழ்காணும் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ கடந்த ஆண்டில் இருந்தே " பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் " என்கிற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?
வீடியோவில் இருக்கும் நபர் பறவைகளை பழக்கி வைத்து, இப்படி செய்ய வைத்துள்ளார் என நினைத்தே இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் வீடியோவில் இருப்பது நிஜ பறவைகளே அல்ல. 25 நொடிகள் கொண்ட வீடியோவில் 10-வது நொடியில் அந்த நபரின் பகுதி கட் ஆகி மாறுவதையும், மேலே பறவைகள் பகுதியில் கட் ஆகாததையும் பார்க்க நேரிட்டது.

அதேபோல், தொடக்கத்தில் வீடியோவின் மேலே டிக்டாக் வீடியோக்களில் இடம்பெறுவது போன்ற ஐடி குறியீடு இருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும், பின்னணி இசை, ஒலி, வீடியோ உள்ளிட்டவை அனைத்தும் டிக்டாக் வீடியோவாக இருக்கும் என எண்ணத் தோன்றியது. ஆகையால், " birds tiktok video " என்கிற கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது இதே பேட்டனில் பறவைகளை கொண்டு செய்யப்பட்ட வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

டிக்டாக் செயலியில் இப்படி பல விதமான வீடியோக்களை செய்து வெளியிட்டு வந்துள்ளனர். டிக்டாக்கில் இப்படியான வீடியோக்கள் வெளியாவது தெரியாத நபர்கள் உண்மையாகவே மனிதரின் கை அசைவிற்கு பறவைகள் ஒவ்வொரு வடிவமாக மாறுவதாக ஆச்சரியத்துடன் வீடியோவை தவறாக பகிர்ந்து வருகிறார்கள். தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.
முடிவு :
நம்முடைய தேடலில், பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் என வைரல் செய்யப்படும் வீடியோ டிக்டாக் செய்யப்பட்ட வீடியோ என்றும், அது உண்மையான பறவைகள் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.

உண்மை என்ன ?
வீடியோவில் இருக்கும் நபர் பறவைகளை பழக்கி வைத்து, இப்படி செய்ய வைத்துள்ளார் என நினைத்தே இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் வீடியோவில் இருப்பது நிஜ பறவைகளே அல்ல. 25 நொடிகள் கொண்ட வீடியோவில் 10-வது நொடியில் அந்த நபரின் பகுதி கட் ஆகி மாறுவதையும், மேலே பறவைகள் பகுதியில் கட் ஆகாததையும் பார்க்க நேரிட்டது.

அதேபோல், தொடக்கத்தில் வீடியோவின் மேலே டிக்டாக் வீடியோக்களில் இடம்பெறுவது போன்ற ஐடி குறியீடு இருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும், பின்னணி இசை, ஒலி, வீடியோ உள்ளிட்டவை அனைத்தும் டிக்டாக் வீடியோவாக இருக்கும் என எண்ணத் தோன்றியது. ஆகையால், " birds tiktok video " என்கிற கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது இதே பேட்டனில் பறவைகளை கொண்டு செய்யப்பட்ட வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
டிக்டாக் செயலியில் இப்படி பல விதமான வீடியோக்களை செய்து வெளியிட்டு வந்துள்ளனர். டிக்டாக்கில் இப்படியான வீடியோக்கள் வெளியாவது தெரியாத நபர்கள் உண்மையாகவே மனிதரின் கை அசைவிற்கு பறவைகள் ஒவ்வொரு வடிவமாக மாறுவதாக ஆச்சரியத்துடன் வீடியோவை தவறாக பகிர்ந்து வருகிறார்கள். தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.
முடிவு :
நம்முடைய தேடலில், பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் என வைரல் செய்யப்படும் வீடியோ டிக்டாக் செய்யப்பட்ட வீடியோ என்றும், அது உண்மையான பறவைகள் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.
