YouTurn

மேக் இன் இந்தியாவில் உருவான ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியா ?

மேக் இன் இந்தியாவில் உருவான ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரம்மாண்டமான விமானத்தில் இரயிலின் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல். பிரதமர் மோடியின் “ மேக் இன் இந்தியா “ திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்வதாக செய்தி. இந்த செய்தியை பார்த்தவர்கள் தவறான செய்தி என்றும்...

பரவிய செய்தி

“ மேக் இன் இந்தியா ” திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி.



 

விரிவான விளக்கம்

பிரம்மாண்டமான விமானத்தில் இரயிலின் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல். பிரதமர் மோடியின் “ மேக் இன் இந்தியா “ திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்வதாக செய்தி.



இந்த செய்தியை பார்த்தவர்கள் தவறான செய்தி என்றும், போட்டோஷாப் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், பரவும் செய்தியில் புகைப்படங்கள் மட்டுமே தவறானதாகும்.

பிரம்மாண்டமான விமானம் :

இந்தியாவில் இருந்து ரயில்களை ஏற்றுமதி செய்யும் விமானங்கள் எனப் பதிவிடப்பட்ட படங்களில் உள்ள விமானங்கள் ரஷ்யாவை சேர்ந்தவை. ரஷ்யாவில் Antonov An-225 விமானத்தை ரயில்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர்.



Antonov An-225 விமானத்தில் ரயில் பெட்டிகள், ஹெலிகாப்டர்களை ஏற்றுமதி செய்யும் வீடியோ Youtube-ல் military update என்ற சேனலில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது.

அந்த விமானத்தின் படங்களையே ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வதாக தவறாக பகிர்ந்து உள்ளனர்.

மேக் இன் இந்தியா :

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில்கள் ஆஸ்திரேலிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது உண்மையே. 2016-ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6 ரயில் பெட்டிகள் மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அவை விமானம் மூலம் கொண்டு செல்லப்படவில்லை. கப்பல்கள் மூலமே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இரண்டாவது முறையாக மீண்டும் ரயில்கள் ஏற்றுமதி செய்யும் ஆர்டரை 2018 டிசம்பரில் Alstom பெற்றுள்ளது. மும்பை மெட்ரோ லைன் 3-க்குமான  தயாரிப்பு பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில்கள் கப்பல்கள் மூலமே ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. விமானத்தின் படங்கள் மட்டுமே தவறான தகவல்.

சுருக்கமாக

சரியானவை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில் ஆஸ்திரேலியா விற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தவறானவை: படம்

உண்மை:

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலிய நாட்டிற்க 2016-ல் கப்பல் மூலமே ஏற்றுமதி செய்யப்பட்டன. படத்தில் காட்டப்பட்டுள்ள ரயிலை ஏற்றுமதி செய்யும் விமானம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது. இதற்கும் இந்தியாவிற்கு சம்பந்தமில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.