YouTurn

மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?

மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவாலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.



அந்த பதிவு தற்போது முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ளத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

சிவலிங்கம் கிடைத்த புகைப்படத்தை பார்க்கையில், " அது கோவில் பகுதி போன்றும், பின்னால் புத்தர் உள்ளிட்ட சில சாமி சிலைகளும் உள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறவில்லை. கோவில் பகுதியில் பள்ளம் தோண்டியது போன்று சில அடிகளிலேயே சிவலிங்கம் தென்பட்டு இருக்கிறது " எனத் தெளிவாய் தெரிகிறது.



சிவலிங்கம் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக 2021 ஜூன் மாதம் சமூக வலைதள பதிவுகள் மற்றும் சில செய்திகள் கிடைத்தன.



Facebook link

மே 27-ம் தேதி TheSquint எனும் முகநூல் பக்கத்தில், சந்திரபூர் மாவட்டத்தின் சாவோலி தாலுகா அருகே வைன் கங்காஆற்றின் வடக்கு கடற்கரை பகுதியில் ஒரு கோவில் கட்டும் போது 5 அடி நீள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது " எனக் கூறப்பட்டுள்ளது.  



2021 ஜூன் 1-ம் தேதி thehitavada எனும் இணையதள செய்தியில், " சந்திரபூரில் இருந்து விதர்பாவை ஆண்ட பரமார் ஆட்சியின் போது இந்த சிவலிங்கம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியரான அசோக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். இந்த சிவலிங்கம் 11 முதல் 12-ம் நூற்றாண்டை சார்ந்தது " என இடம்பெற்று இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பழமையான சிவலிங்கம் கிடைத்தது உண்மையே. ஆனால், அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கவில்லை, கோவில் கட்டுமானப் பணியின் போதே 5 அடி நீள சிவலிங்கம் கிடைத்துள்ளது. அது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது அல்ல. பரமார் ஆட்சியில் கி.பி 11 முதல் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க