YouTurn

திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கென்று தனி மதுபார் தொடங்கப்பட்டதா ?

திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கென்று தனி மதுபார் தொடங்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெண்களுக்கு தனி பார். இதுதான் திமுகவுக்கு சமூக நீதி. இப்படித்தான் திமுக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.. பெண்களை குடிகாரர்களாக்கும் திமுக



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

திமுக ஆட்சியில் மதுரை நகரில் முதல்முறையாக பெண்களுக்கென்று தனியாக மதுபார் தொடங்கப்பட்டதாகக் கூறி மாலை முரசு செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக மதுபார் திறக்கப்பட்ட செய்திக் குறித்து தேடுகையில், 2019 டிசம்பர் 3-ம் தேதி முகநூல் பக்கம் ஒன்றில் இதே செய்தித்தாள் பக்கம் " பதிவாகி இருக்கிறது. 2019 டிசம்பர் 1-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.



Facebook link 

முழுமையான செய்தி பக்கத்தில், " பெண்களுக்கென்று ஸ்பெஷலாக புதிய மதுபார் ஒன்று தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் புதிய மதுபார் துவங்கப்பட்டது. மதுபானத்திற்கு பெண்கள் செல்வது என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது " என வெளியாகி இருக்கிறது.



அந்த செய்திக் குறித்து மேற்கொண்டு தேடுகையில், " 2019 டிசம்பர் 1-ம் தேதி தினமலரில் "தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் ; வரவேற்பா ? எதிர்ப்பா? " எனும் தலைப்பில் இதே செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

2016-ம் ஆண்டிலும் மதுரை விஷால் தி மாலில் "ladies night " எனும் பெயரில் பெண்களுக்கு தனி மதுபார் திறக்கப்பட்டு உள்ளதாக பரவியச் செய்திக் குறித்து அந்த ரெஸ்ட்டாரண்ட் ஜெனரல் மேனேஜர், " விளம்பரத்தில் ட்ரிங்க்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரிங்க்ஸ் என்றால் ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே ட்ரிங்க்ஸ் வகையில் தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தி உள்ளோம். பெண்கள் தனியாக வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம் " எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.



முடிவு : 


நம் தேடலில், திமுக ஆட்சியில் மதுரை நகரில் பெண்களுக்கென்று தனி மதுபார் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் செய்தித்தாள் பக்கம் 2019-ம் ஆண்டில் வெளியானது. அதும் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் குறித்து அல்ல, மதுரையில் உள்ள விஷால் தி மாலில் துவங்கப்பட்டதாக வெளியாகி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க