YouTurn

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயரை பாஜக வைக்க உள்ளதாகப் பரவும் போலிச் செய்தி

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயரை பாஜக வைக்க உள்ளதாகப் பரவும் போலிச் செய்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் -மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வி.கே.சிங்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

துரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் என ஒன்றிய பாஜக அரசின் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்து உள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





இதையடுத்து, தீனதயாள் உபாத்யாயா என்பவர் யார் என்றும், மதுராவில் பிறந்தவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். 1951ம் ஆண்டில் இருந்து பாரதிய ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து பின்னர் 1967ல் தலைவராக மாறினார். ஆனால், 1968ல் தீனதயாள் உபாத்யாயா மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயரை சூட்ட உள்ளோம் என ஒன்றிய பாஜக அமைச்சர் கூறியதாக எந்த செய்திகளிலும் வெளியாகவில்லை.



Facebook link | Archive link 

பரப்பப்படும் போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " மதுரை விமான நிலைய விரிவாகக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை..! - மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெனரல் திரு.வி.கே.சிங். " என்ற போஸ்டரே தமிழ்நாடு பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் டிசம்பர் 30ம் தேதி பதிவாகி இருந்தது கிடைத்தது.



மதுரை விமான நிலைய விரிவாகக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என ஒன்றிய இணை அமைச்சர் கூறியதாக வெளியான போஸ்டரில் மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என எடிட் செய்து உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக பரப்பப்படும் போஸ்டர் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க