YouTurn

மடகாஸ்கரில் சிவலிங்க வடிவ மரம் எனப் பட்டைய போட்டு பகிரும் புகைப்படம் !

மடகாஸ்கரில் சிவலிங்க வடிவ மரம் எனப் பட்டைய போட்டு பகிரும் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆப்பிரிக்க பெருங்கடலில் எட்டாவது கண்டம் என்று அழைக்கப்படும் அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர் தீவு நாட்டில் சிவலிங்கம் வடிவில் தோன்றியுள்ள மரம்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

ஃபோட்டோஷாப் மூலம் பட்டையைப் போட்டு இருக்கும் மரத்தினைக் காண்பித்து மடகாஸ்கர் நாட்டில் சிவலிங்கம் வடிவில் தோன்றியுள்ள மரம் எனக் கூறி இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.





இதை பார்ப்பவர்களுக்கு சாதாரண மரம் என புரிந்து கொள்ள முடிந்தாலும், சாமானிய மக்கள் பலரும் உண்மை என நினைத்து  " ஓம் நமச்சிவாய " என கமெண்ட் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?



பாவோபாப் எனப்படும் இவ்வகையான மரங்கள் மடகாஸ்கர், பிற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. பாவோபாப் வகை மரங்களில் தண்டு பகுதி பருமனாகவும், நீளமாகவும் இருக்கும் மற்றும் கிளை பகுதி சிறிதாகவே காணப்படும்.



Twitter archive link 

ஆப்பிரிக்கா நாடுகளில் மரங்களின் சிறப்பு என்றாலே பாவோபாய் மரங்கள் எனக் குறிப்பிடலாம். பாவோபாய் மரங்களில் மொத்தம் 9 இனங்கள் உள்ளன. பாவோபாய் மரங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால், பருவநிலை மாற்றங்கள் காரணங்களால் பழமையான பாவோபாய் மரங்கள் இறந்து வருகின்றன.



பாவோபாய் மரங்களில் உருளையாக இருக்கும் அடிப்பகுதியை சிவலிங்க வடிவில் இருப்பதாகக் கூறி ஃபோட்டோஷாப்பில் பட்டைய போட்ட புகைப்படத்தை உண்மை என நினைத்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதை கிண்டலுக்காக செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், பலரும் இதை உண்மை என நினைத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : 6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரமா ?| உலகின் பழமையான மரம் எது ?

இதற்கு முன்பாக, 6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரங்கள் என தவறான தகவல் ஒன்று வைரல் செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருக்கிறோம்.

முடிவு :

நம் தேடலில், மடகாஸ்கர் நாட்டில் சிவலிங்க வடிவில் தோன்றிய மரம் என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படும் பாவோபாப் மரங்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க