YouTurn

தமிழகத்தில் ஒரே வில்லில் மூன்று அம்பு விடுவது போன்ற சிற்பம்.

தமிழகத்தில் ஒரே வில்லில் மூன்று அம்பு விடுவது போன்ற சிற்பம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஜுகூர் என்ற கிராமத்தில் அறம் வரலாறு ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர் . அவர்கள் ஆச்சரியத்தை எற்படுத்தக் கூடிய இரு நடுகற்களை கண்டுப்பிடித்துள்ளனர் . அந்த அபூர்வமான கற்களில் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை விடும் போர் வீரனின் உருவம்...

பரவிய செய்தி

பாகுபலி படத்தில் இடம் பெற்ற ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடுவது போன்று வரும் காட்சியை போன்று 13 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளது . இவை ஆயிரம் ஆண்டுகளாக நாம் அறிந்த கலையே .

விரிவான விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஜுகூர் என்ற கிராமத்தில் அறம் வரலாறு ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர் . அவர்கள் ஆச்சரியத்தை எற்படுத்தக் கூடிய இரு நடுகற்களை கண்டுப்பிடித்துள்ளனர் . அந்த அபூர்வமான கற்களில் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை விடும் போர் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .


இந்த ஆய்வை குறித்து அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறுகையில் , ஜுகூர் என்ற கிராமத்தில் இதுவரை மூன்று நடுகற்கள் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இந்த கற்கள் போரில் இறந்தவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன . முதலில் உள்ள கல்லில் இருக்கும் வீரன் வலது கையில் மூன்று அம்புகளை பிடித்துள்ளான் , இடது கையில் வில்லினை ஏந்தி உள்ளான் . உடலில் ஆபரணங்கள் அணிந்தும் , இடையில் ஆடையும் , இடப்புறம் சசாய்ந்த கொண்டையுடன் இருக்கும்படி சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது .


இந்த வீரனை எதிர்கொண்ட மற்றொரு வீரனின் சிற்பம் வலதுபுறம் சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது . அவனது கையில் இருக்கும் வாளையும் , கேடயத்தையும் பார்த்தால் கங்கர்களின் போர் வீரனாக இருக்கலாம் .  மற்றொரு நடுக்கல்லில் வலது கையில் மேல்நோக்கிய வாள் , இடது கையில் தாமரை மொட்டு போன்ற பொருள் , இடையில் கூர்வாள் , மார்பில்  ஆபரணங்கள் , மேல்பகுதியில் சந்திரன் சூரியன் போன்று செதுக்கப்பட்டுள்ளது . படத்தில் வருவது போன்று ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடும் அளவிற்கு இவர்கள் திறமையானவர்களாக இருந்து உள்ளனர் என்று கூறினார் .


கற்பனையான படங்களை மட்டுமே பார்த்து வியந்து வந்த நமக்கு இதுபோன்ற பண்டைய மனிதர்களின் வீரத்தை பார்க்கும் பொழுது ஆச்சரியாமாக தான் இருக்கும் . இச்சிற்பங்கள் போன்று எத்தனையோ சிற்பங்கள் இன்றளவும் மறைந்து உள்ளன . அவைகளை கண்டுபிடித்தால் பல ஆச்சரிமூட்டும் வரலாறுகள் கிடைக்க வாய்ப்புள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க