YouTurn

கேரளாவில் யோகி ஆதித்யநாத்திற்காக மலர்ந்த தாமரை கூட்டமா ?

கேரளாவில் யோகி ஆதித்யநாத்திற்காக மலர்ந்த தாமரை கூட்டமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேரளாவில் யோகி ஜியின் வருகையால் மக்கள் வெள்ளம் தாமரையாக மலர்ந்த காட்சி..



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுப்பெற வைக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து அம்மாநிலங்களுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், கேரளாவிற்கு வருகை தந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்காக தாமரை வடிவில் கூடிய கூட்டமென இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





Facebook link | Archive link  





உண்மை என்ன ?

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவின் கசரகோட் பகுதியில் கேரளா பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய யாத்ரா கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.



Twitter link | Archive link 

அதுகுறித்து, கேரளா பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில், தாமரை வடிவில் தொண்டர்கள் கூடி இருப்பதாக வைரலாகும் புகைப்படம் இடம்பெறவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



2015-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் 35-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் குஜராத்தின் தாஹோத் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் 25,000 பாஜக தொண்டர்கள் தாமரை வடிவில் ஒன்றுக்கூடி இருக்கிறார்கள். 2015-ல் பிரதமர் நரேந்திர மோடியும் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.



முடிவு :

நம் தேடலில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளாவிற்கு வருகை தந்த போது தாமரை வடிவில் கூடிய பாஜக தொண்டர்கள் என பரப்பப்படும் புகைப்படம் 2015-ல் குஜராத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க