
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
இந்நிலையில், கேரளாவிற்கு வருகை தந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்காக தாமரை வடிவில் கூடிய கூட்டமென இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Facebook link | Archive link

உண்மை என்ன ?
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவின் கசரகோட் பகுதியில் கேரளா பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய யாத்ரா கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
യോഗിയെ ശ്രവികാനായി കാസർഗോട്ട് തടിച്ചുകൂടിയ പ്രവർത്തകർ 💪#KeralaVijayaYatra#KeralaWelcomesYogiJi pic.twitter.com/ksZliKiOEZ
— BJP KERALAM (@BJP4Keralam) February 21, 2021
Twitter link | Archive link
அதுகுறித்து, கேரளா பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில், தாமரை வடிவில் தொண்டர்கள் கூடி இருப்பதாக வைரலாகும் புகைப்படம் இடம்பெறவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

2015-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் 35-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் குஜராத்தின் தாஹோத் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் 25,000 பாஜக தொண்டர்கள் தாமரை வடிவில் ஒன்றுக்கூடி இருக்கிறார்கள். 2015-ல் பிரதமர் நரேந்திர மோடியும் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
An innovative way to mark BJP's 'Sthapana Diwas.' Congrats to the Karyakartas. http://t.co/DlxyrMzbX8 pic.twitter.com/HXmPnE5Eob
— Narendra Modi (@narendramodi) April 6, 2015
முடிவு :
நம் தேடலில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளாவிற்கு வருகை தந்த போது தாமரை வடிவில் கூடிய பாஜக தொண்டர்கள் என பரப்பப்படும் புகைப்படம் 2015-ல் குஜராத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.