
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
ராஜஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று அங்கே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டார்கள் பழைய நினைவில முப்தி முஸ்லிம்கள் ஆட்சி நடப்பதுபோல் அங்கே மத்திய பாஜக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கவர்னர் ஆட்சி நடக்கிறது ஆகவே போலீஸ்காரர்கள் சிறப்பான கவனிப்பு கொடுத்தனர் pic.twitter.com/siU3xjG38S
— சத்தியா🇮🇳🔱 (@Murugan56361942) January 28, 2022

உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 பிப்ரவரி 25-ம் தேதி " பிபிசி இந்தி " செய்தியில், " கடந்த ஆண்டு டெல்லி வன்முறையில் தாக்கப்பட்ட மற்றும் தேசியக் கீதத்தை பாட சொல்லி காவலர்களால் தாக்கப்பட்டவர்களின் நிலைமை என்ன ?" என வைரல் வீடியோ குறித்து வெளியாகி வீடியோவின் தொடக்கத்தில் இப்பகுதி இடம்பெற்று இருக்கிறது.

2020 டெல்லி கலவரத்தின் போது 5 இளைஞர்கள் சாலையில் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது தேசிய கீதம் பாட சொல்லி காவலர்கள் தாக்கும் வீடியோ வைரலாகியது. காவலர்கள் சிலர் லத்தியைக் கொண்டு நன்றாக பாடு எனக் கூறிக் கொண்டே அடிப்பது வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

காவலர்களால் தாக்கப்பட்ட 23 வயதான ஃபைசான் என்ற இளைஞர் இச்சம்பவம் நிகழ்ந்து 3 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 27-ம் தேதி டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தன்னுடைய மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக ஃபைசான் உடைய தாய் குற்றம்சாட்டியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் சென்ற இளைஞர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோசத்தை எழுப்பியதால் பாதுகாப்புப்படை வீரர்கள் தாக்கியதாக சமீபத்திய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், 2020 டெல்லி கலவரத்தின் போது இஸ்லாமிய இளைஞர்களை காவலர்கள் தாக்கியதோடு, தேசிய கீதம் பாடச் சொல்லித் தாக்கும் வீடியோவை தற்போது காஷ்மீரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்களை காவலர்கள் தாக்கியதாகக் கூறி தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.