
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link
விரிவான விளக்கம்

இதற்கிடையில், திமுக அரசு தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளி கல்வித்துறைக்கு ரூ.32 கோடியை மட்டும் செலவிட்டு, கருணாநிதியின் நினைவிடத்திற்கு ரூ.39கோடி செலவிடுவதாக சீமான் புகைப்படத்துடன் கூடிய ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
திமுக அமைச்சர் கே.என்.நேரு , " முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் தலைவர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு " என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் தலைவர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு. pic.twitter.com/dLPPOLkGHr
— K.N.NEHRU (@KN_NEHRU) August 24, 2021
Twitter link | Archive link
திமுக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தேடுகையில், " புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் பள்ளிக்கல்விக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு : உயர்கல்விக்காக ரூ.5,359 கோடி நிதி ஒதுக்கீடு " என ஆகஸ்ட் 14-ம் தேதி தினகரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்விதுறைக்காக ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், கடந்த நிதிநிலை அறிக்கையை விட இம்முறை ரூ.1,582 கோடி குறைக்கப்பட்டு இருப்பதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளி கல்விதுறைக்கு ரூ.32 கோடி என்றும், கருணாநிதியின் நினைவிடத்திற்கு மட்டும் ரூ.39 கோடி என்பது தவறான தகவல். பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.32,599.54 கோடியை வெறும் ரூ.32 கோடி மட்டும் என தவறாக பரப்பப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.