YouTurn

கைலாசா நாட்டின் கரன்சி என பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

கைலாசா நாட்டின் கரன்சி என பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கைலாச நாட்டு நோட்டு அறிமுகம். இந்து நாடாக அறிவிப்பு. வாழ்த்துக்கள் நித்தி.

விரிவான விளக்கம்

இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா கைலாசா எனும் நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக வீடியோவை வெளியிட்டார். இன்றளவும், நித்தியானந்தாவை கைது செய்யாத நிலை நீடித்து இருக்க, நாட்டில் நிகழும் சம்பவங்கள் மற்றும் முக்கிய விசயங்கள் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், கைலாசா நாடு குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது.



Facebook link | archive link 

இந்நிலையில், கைலாசா நாட்டின் கரன்சி நோட்டினை வெளியிட்டு உள்ளதாக நித்தியானந்தாவின் முகம் பொறிக்கப்பட்ட மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்தும், கைலாசா நாட்டின் கரன்சியில் தமிழ் இடம்பெற்றதாக மீம்ஸ்களும் பரவி வருகின்றன. இதுகுறித்த உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ? 

நித்தியானந்தா கைலாசா நாட்டிற்கு கரன்சி நோட்டுகள் மற்றும் ரிசர்வ்  பேங்க் அப் கைலாசா உள்ளிட்டவையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியும் வெளியிட உள்ளதாகவும், 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கை தயாராக உள்ளதாகவும் தமிழ் செய்திகளில் வெளியாகின. எனினும், விநாயகர் சதுர்த்தி அன்று கரன்சி நோட்டு உள்ளவை வெளியாகும் என்றே செய்திகளில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி பார்த்தால் கூட, அதற்கு முன்பாகவே மேற்காணும் கரன்சி புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது. கைலாசா உடைய இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் கூட வைரலாகும் புகைப்படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை.



கைலாசா மற்றும் நித்தியானந்தா தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் அனைத்திலும் " Kailasa " என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வைரலாகும் புகைப்படத்தில் " Reserve Bank of Kailasha " என இடம்பெற்று உள்ளது. ஃபோட்டோஷாப் செய்தவர்கள் கைலாசாவின் சரியான ஆங்கில எழுத்தை பொறிக்கத் தவறியுள்ளனர்.



முடிவு : 

நம் தேடலில், நித்தியானந்தா வெளியிட்ட கைலாசா கரன்சி என வைரலாகும் புகைப்படம் உண்மையானது அல்ல, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க