YouTurn

ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !

ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது ? - ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆதங்கம்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நீட் விவகாரத்தை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்யப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், ஊடகவியலாளர் செந்தில்வேல், தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது " என விமர்சித்து பேசியதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், செப்டம்பர் 15-ம் தேதி @Senthilval79 எனும் ட்விட்டர் பக்கத்தில், இந்த விடயத்தில் நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. @mkstalin வாக்குறுதிகள் என்னாச்சு? முடியாது விட்டால் பதவி விலகுங்கள். நாங்கள் சீமானுடன் இனையும் சந்தர்ப்பத்தை நீங்களாகவே உருவாக்காதீர் இனைந்தால்!!!! மாபெரும் போராட்டம் வெடிக்கும் தமிழ் மண்ணில் " எனும் நிலைத்தகவல் உடன் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு பதிவாகி இருக்கிறது.



ஆனால், @Senthilval79 எனும் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கம் போலியானது. @senthilvel79 எனும் ட்விட்டர் பக்கமே உண்மையானது. போலியான ட்விட்டர் பக்கத்தை வைத்துக் கொண்டு போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்பாகவும், இதே போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான தவறான பதிவுகளை வைரல் செய்தது பற்றி கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் வெளியான போலி ட்வீடை பகிர்ந்த மாரிதாஸ் ரசிக பக்கம் !

அடுத்ததாக, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் இணையதளப் பிரிவை தொடர்புக் கொண்டு பேசுகையில், " இதை நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது " என பதில் அளித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. திமுக பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது, அதை வெளியிட்ட ட்விட்டர் பக்கமும் போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க