YouTurn

ஜேஎன்யூ-வில் ஏபிவிபி மாணவியிடம் இருந்து துப்பாக்கியை போலீஸ் கைப்பற்றியதா ?

ஜேஎன்யூ-வில் ஏபிவிபி மாணவியிடம் இருந்து துப்பாக்கியை போலீஸ் கைப்பற்றியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தது டெல்லி காவல்துறை.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ராம நவமியை முன்னிட்டு அசைவ உணவு சமைக்க கூடாது என பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி ஆதரவு மாணவர் குழுவிற்கு இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியதாக 16 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை பிரித்து எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியதாக ஏப்ரல் 13-ம் தேதி NDTV செய்தியில் அதே வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.



" உத்தரப்பிரதேசத்தின் ஃபைரோசாபத் நகரில் உள்ள பள்ளி ஆசிரியரான கரிஷ்மா சிங் யாதவ் என்பவர் தன்னுடைய வேலை காரணமாக மையின்பூரி பகுதிக்கு சென்ற போது போலீசார் நாட்டுத் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது".



twitter link  | Archive link 

இதுகுறித்து அப்பெண் மீது கோடவாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மையின்பூரி காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.

முடிவு:

நம் தேடலில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடம் கைத்துப்பாக்கியை டெல்லி காவல்துறை பறிமுதல் செய்ததாக பரவும் தகவல் தவறானது. அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மையின்பூரி பகுதியில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க