YouTurn

ஜெயலலிதா உடன் நிர்மலா சீதாராமன் இருப்பதாக பரப்பப்படும் தவறான புகைப்படம் !

ஜெயலலிதா உடன் நிர்மலா சீதாராமன் இருப்பதாக பரப்பப்படும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நமது தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜெயலலிதா இருக்கும் அரிதான புகைப்படம் .

Twitter link

விரிவான விளக்கம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒன்றாக இருக்கும் அரிதான புகைப்படம் என ஜெயலலிதாவின் இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ஜெயலலிதா மற்றும் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருப்பதாக இந்த புகைப்படமும் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?



வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் ஜெயலலிதா உடன் இருப்பது நிர்மலா சீதாராமன் அல்ல, ஜெயலலிதாவின் தோழி எழுத்தாளர் சிவசங்கரி. இந்த புகைப்படம் 2014-ல் vintageindianclothing எனும் இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது. அதில், ஜெயலலிதா சிவசங்கரி உடன் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.



2018-ல் dtnext இணையதளத்தில் வெளியான செய்தியில், ஜெயலலிதாவும் சிவசங்கரியும் இருக்கும் வேறு சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.



முடிவு :

நம் தேடலில், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜெயலலிதா இருப்பதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது நிர்மலா சீதாராமன் அல்ல, ஜெயலலிதாவின் தோழி எழுத்தாளர் சிவசங்கரி என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க