YouTurn

நியூசிலாந்தில் பழங்குடியினர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தவறான தகவல்!

நியூசிலாந்தில் பழங்குடியினர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

போராட்டத்தில் இஸ்லாமிய கொடியை மட்டுமல்ல, இந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளையும் சேதப்பட்டுத்தியுள்ளனர்.

பரவிய செய்தி

நியூசிலாந்தில், பூர்வீக மாவோரி இனத்தவர்கள் #இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிராகப் போராடி, ஜிஹாதிக் கொடியை அழிக்கின்றனர்.

“நியூசிலாந்து கிறிஸ்தவ நாடு, அமைதி மார்க்கம் அங்கு வரவேற்கப்படுவதில்லை!”


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

நியூசிலாந்தில் போராட்டக்காரர்கள் சாலையில் திரண்டு பழங்குடிகளின் பாரம்பரிய காக்ஹா நடனம் ஆடி, இஸ்லாமிய கொடி ஒன்றை கிழிப்பதைக் காட்சிபடுத்தும் சிறிய வீடியோவை பதிவிட்டு, ‘நியூசிலாந்தில் பூர்வீக மாவோரி இனத்தவர்கள் இஸ்லாமியர்களின் குடியேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக’ பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE ECONOMIC TIMES’ செய்தித்தளத்தில் இது குறித்து ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 



2025 ஜூன் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ’டெஸ்டினி சர்ச்’ என்ற அமைப்பைச் சேர்ந்த பிரையன் டமாகி என்பவர் நியூசிலாந்தின் மத்திய ஆக்லாந்தில் உள்ள குயின் தெருவில் கிறிஸ்துவம் அல்லாத மதத்தினர் நியூசிலாந்தில் குடியேறுவதை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார். அதில் இந்து, பௌத்தம், இஸ்லாம், சீக்கியம் ஆகிய மதங்களின் கொடிகளை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேற்கூறிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, மேலும் தேடியபோது, ’State craft’ என்ற யூடியூப் தளத்தில் 2025 ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் இந்த போராட்டத்தில் ’இந்து மதக்கொடியும்‘சீக்கிய மதக்கொடியும்’ கிழிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. 



இதுகுறித்து ’India Today’ செய்தித்தளமும் நியூசிலாந்தின் இந்த போராட்டத்தில் இந்து, பௌத்த மதக் கொடிகள் சேதப்படுத்தப்பட்டதை பதிவு செய்துள்ளது.


image.png


நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ மதம் கிறிஸ்துவம் தான் என்று கூறி, இந்த  ’டெஸ்டினி சர்ச்’ அமைப்பினர் பிற மதக் கொடிகளை கிழித்ததை மத சகிப்பின்மை என்றும் வெறுப்பை பரப்பும் வகையில் இது இருக்கிறது என்றும் நியூசிலாந்தின் பெரும்பாலான மக்கள் கருதுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


’டெஸ்டினி சர்ச்’  அமைப்பினரின் இந்த வெறுப்பை விதைக்கும் போராட்டத்தை நியூசிலாந்தின் கிறிஸ்த்துவ திருச்சபை தலைவர்கள் கூட கண்டித்திருக்கிறார்கள். அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, நியூசிலாந்தில் அந்த போராட்டத்தில் இஸ்லாமிய கொடியை மட்டுமல்ல, இந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளையும் சேதப்பட்டுத்தி மத வெறுப்பை விதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.


முடிவு:


இந்தப் போராட்டத்தில் மத வெறுப்பை விதைக்கும் வகையில் கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளை கிழித்துள்ளதை மறைத்து, இஸ்லாம் மதத்திற்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்தப்பட்டதாக பாஜகவினர் தவறாக பரப்பிவருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க