YouTurn

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் குழந்தையை சமைத்து கொடுத்ததாகப் பரவும் ஈராக் எம்பி ஐஎஸ்ஐஎஸ் பற்றிப் பேசும் பழைய வீடியோ !

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் குழந்தையை சமைத்து கொடுத்ததாகப் பரவும் ஈராக் எம்பி ஐஎஸ்ஐஎஸ் பற்றிப் பேசும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது: மூன்று நாட்கள் அவர்கள் கஸ்டடியில் இருந்தேன். உணவு உட்பட எதுவுமே கொடுக்கவில்லை. பிறகு கொஞ்சம் உணவும் சமைத்த மாமிசமும் கொண்டு வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன். அதன் பிறகு தான் சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தயின் மாமிசம் என்று சொன்னார்கள். ஒரு பத்து வயது பெண் குழந்தையை கற்பழித்து அவளை பெற்றோர் முன் வைத்து கொன்று விட்டார்கள் . இவர்களைத்தான் நல்லவர்கள் என்று I.N.D.I.A கூட்டணி ஆதரிக்கிறது. இவர்களுக்கு வாக்களித்தால் நாளை நமது பாரத மக்களுக்கும் இதே கொடூரமான நிகழ்வு தான் நடக்கும்.



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ஸ்ரேல் பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் கடத்தி வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு, அவரின் ஒரு வயது மகனையே கொன்று சமைத்து கொடுத்துள்ளனர் என்று அங்கிருந்து தப்பித்து வந்த இஸ்ரேலிய பெண் ஊடகத்திடம் பேசுவதாக உள்ள வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது.

மேலும் அதில், "மூன்று நாட்கள் அவர்களுடைய இடத்தில் இருந்தேன். உணவு உட்பட எதுவுமே கொடுக்கவில்லை. பிறகு கொஞ்சம் உணவும் சமைத்த மாமிசமும் கொண்டுவந்து வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன். அதன் பிறகு தான் சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தையின் மாமிசம் என்று. மேலும் ஒரு பத்து வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்து அவளை பெற்றோர் முன் வைத்து கொன்று விட்டார்கள்." என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.





Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

இதன் 4:31 நிமிடங்கள் கொண்ட முழு வீடியோ "The Middle East Media Research Institute (MEMRI)" என்ற பேஸ்ஃபுக் பக்கத்தில் கடந்த 2017 ஜூன் 26 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், "ஈராக்கைச் சேர்ந்த யாசிதி மக்களின் எம்பியான வியான் டாகில் தனது மக்களுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் நடத்திய அட்டூழியங்களை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார் என்றுள்ளது.



அந்த நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய சில அட்டூழியங்களையும் விவரித்தார்: "நாங்கள் தொடர்ந்து கேட்கும் கேள்வி என்பது: ஏன் எங்களுக்கு இவ்வாறு நடக்கிறது என்பது தான்?" ஜூன் 2 நேர்காணலின் போதே, டாகில் மற்றும் எக்ஸ்ட்ரா நியூஸ் டிவியில் நேர்காணல் செய்த தொகுப்பாளர் என இருவரும் அழுதனர். மேலும் அதில் சுமார் 6,900 யாசிதி பெண்கள், இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் கடத்தப்பட்டனர், அதில் 4-10 வயதுடைய சிறுவர்களும் இருந்தனர். அந்த சிறுவர்கள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் " என அவர் கூறினார் என்றுள்ளது. 



இந்த வீடியோ MEMRI உடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த 2017 ஜூன் 26 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அதில் "யாசிதி மக்களின் ஈராக் எம்பியான வியான் டாகில் தனது மக்களுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் நடத்திய அட்டூழியங்களை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் படிக்க: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொல்லும் காட்சி எனப் பழைய ஐஎஸ்ஐஎஸ் வீடியோவைப் பகிர்ந்த இந்து மக்கள் கட்சி !

மேலும் படிக்க: ‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !

முடிவு:

நம் தேடலில், ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் கடத்தி வைத்திருந்த இஸ்ரேல் பெண்ணிற்கு அவரின் ஒரு வயது மகனை கொன்று சமைத்து கொடுத்துள்ளனர் என்று கூறி பரவும் வீடியோ தவறானது. அது கடந்த 2017-ல் ஈராக்கில் உள்ள யசிதி பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து ஈராக் எம்பியான ‘வியான் டாகில்’ ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க