YouTurn

தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ்', கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனமா?

தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ்', கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகின் முன்​னணி விண்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் ஒன்​றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் கார் என்ஜின்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ்.. உலகளவில் (ஆண்டுக்கு) எத்தனை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்கப்படுகின்றன என்று தெரியுமா? சுமார் 5700. ஒரு என்ஜினின் உற்பத்தி செலவு : சுமார் ₹50-70 லட்சம். மொத்த உற்பத்தி மதிப்பு (அவர்கள் இங்குள்ள அனைத்து என்ஜின்களையும் தயாரித்தாலும் கூட) : சுமார் 3000 கோடி. பல மாநில அரசுகள் எங்கும் செல்லாமல் 10-20,000 கோடி முதலீட்டைப் பெறுகின்றன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று ₹1–2 லட்சம் கோடி முதலீட்டை பெற்றுள்ளார். 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்ற அவர்  முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்தித்து பேசினார். 


இந்நிலையில் “கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.  பல மாநில அரசுகள் எங்கும் செல்லாமல் 10k-20,000 கோடி முதலீட்டைப் பெறுகின்றன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று இந்த நிறுவனத்துடன்  ₹1–2 லட்சம் கோடி முதலீட்டை தான் பெற்றுள்ளார்”  என்று கூறி பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன? 


பரவி வரும் தகவல்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் IAMPL (International Aerospace Manufacturing Pvt. Ltd) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வானூர்தி இயந்திரங்கள் (Aero-Engine) தொடர்பான பாகங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், உலகின் முன்​னணி விமான இயந்திரங்கள் (Aero engines) மற்​றும் பாது​காப்பு தொழில்​நுட்ப (Defence) நிறு​வனங்​களில் ஒன்​றான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) நிறுவனத்துடன் இணைந்து விரிவாக்கம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது. 


அந்த வகையில், ஓசூரில் செயல்பட்டு வரும் ஐஏஎம்பிஎல் நிறுவனத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இணைந்து MRO ( Maintenance, Repair, overhaul) மையம், ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் (R&D), மற்றும் பயிற்சி நிறுவனம் ( Training Institute ) அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொழில் வழித்தடத்தின் முக்கிய மையமாக விளங்கும். 



இதே போன்று, “இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பதால், ரோல்ஸ் ராய்ஸுடனான இந்த ஈடுபாடு மேம்பட்ட விண்வெளி உற்பத்திக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றும் என்று மாநில தொழில்துறை தெரிவித்துள்ளது“ என்று குறிப்பிட்டு ‘Financial Express‘ ஊடகத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், உலகின் முன்​னணி விண்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் ஒன்​றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க