YouTurn

கச்சத்தீவு மீட்புக்குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக பரவும் பொய் செய்தி!

கச்சத்தீவு மீட்புக்குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அடுத்த தமிழக முதல்வர் தயாராகிறார்...

அண்ணாமலை.ஜி விரைவில் தமிழக முதல்வர்…

எல்லா புகழும் தேசியத்துக்கே…

X Link

விரிவான விளக்கம்

கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் எனக் குறிப்பிட்டு தந்தி டிவி  செய்தி அட்டை ஒன்றை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

பரவக்கூடிய தந்தி டிவி நியூஸ் கார்ட் குறித்து  அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் தேடினோம்.  அப்படி எந்தவொரு செய்தி அட்டையையும் அவர்கள் சமீபத்தில் பதிவிடவில்லை என்பதை அறியமுடிந்தது. 

இதனைத்தொடர்ந்து, பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடினோம். அதிலும், இம்மாதிரியான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை எனத் தெரியவந்தது.

மேலும், வைரலாகக் கூடிய நியூஸ் கார்டில் குறிப்பிட்டுள்ள  ஜூன் 11, 2024 அன்று தந்தி தொலைக்காட்சியும் இவ்வாறான செய்தியை பதிவிடவில்லை என அறியமுடிந்தது.

 



மேற்கொண்டு தேடியதில், கச்சத்தீவு – புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று பிரதமர் மோடி பேசியதாக ஏப்ரல் 01, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி ஒரு செய்தி அட்டை  வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது.

இதிலிருந்து, பரவக்கூடிய தந்தி டிவி செய்தி அட்டை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

 முடிவு :

நம் தேடலில், கச்சத்தீவு மீட்புக் குழுவின் தலைவராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் எனப் பரவும் தந்தி டிவி செய்தி அட்டை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க