யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தோனேஷியாவில் சமீபத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் மோதி இறந்ததால், அங்கு போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, நேபாள கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
அராஜகம் செய்யும் ஒவ்வொரு அரசுக்கும் இது எச்சரிக்கை மணி.. மக்கள் புரட்சி.. நேபாளம் வன்முறை..
விரிவான விளக்கம்
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஊழல் எதிர்ப்பாகவும் மாறி அங்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு அங்கு வன்முறை வெடித்து பிரதமர் இல்லம், நாடாளுமன்ற கட்டடங்கள் உட்பட பல முக்கிய இடங்கள் தாக்கப்பட்டன. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் நேபாள கலவரத்தில் காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் இதே வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
Indonesia is currently experiencing widespread protests and unrest, sparked by a proposed housing allowance for parliament members and fueled by growing public dissatisfaction with the government. The protests intensified after the killing of a motorcycle taxi driver by a police… pic.twitter.com/me8vbY4AI2
மேலும் தேடியதில் , பரவி வரும் வீடியோ ‘’TIMES PRESS” ஊடகப் பக்கத்தில் “இந்தோனேசியாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் 50 மில்லியன் ரூபாய் (சுமார் 3,000–5,000 அமெரிக்க டாலர்கள்) வரை மாதந்தோறும் வீட்டுவசதி உதவித்தொகை பெறுவதாகக் கூறி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்“ என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 03 அன்றுபதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
Thousands of people are protesting in Indonesia after it was revealed the corruption that lawmakers receive a monthly housing allowance worth up to 50 million rupiah (about 3,000–5,000 US dollars). pic.twitter.com/JNyPu6k8em
இதே போன்று “BBC” ஊடகப் பக்கத்திலும், “இந்தோனேஷியாவில் சமீபத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் மோதி இறந்ததால், அங்கு போராட்டம் தீவிரமடைந்தது “ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட வீடியோவை, நேபாள கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பியுள்ளயுள்ளனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், நேபாள கலவரத்தில் காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள் என்று கூறி பரவும் வீடியோ, இந்தோனேஷியாவில் நடந்த போராட்டத்தோடு தொடர்புடைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.