YouTurn

இந்திய தீவு ஒன்றிற்கு கலாம் ஐயாவின் பெயர் சூட்டியுள்ளனரா?

இந்திய தீவு ஒன்றிற்கு கலாம் ஐயாவின் பெயர் சூட்டியுள்ளனரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவு வங்காள விரிகுடாவின் ஒடிசா கடற்க்கரையில் இருந்து 1௦ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . சுமார் 2 கி.மீ நீளம் கொண்ட இந்த தீவின் நிலபரப்பு 390 ஏக்கர் ஆகும் . இந்த தீவில் ஆகாஷ் , அக்னி , அஸ்ட்ரா , பிரம்மோஸ் , நிர்ர்பாய் ,பிரஹார் , பிரித்வி , ஷாரியா , மேம்பட்ட...

பரவிய செய்தி

ஒடிசாவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவிற்கு அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் .

விரிவான விளக்கம்

இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவு வங்காள விரிகுடாவின் ஒடிசா கடற்க்கரையில் இருந்து 1௦ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . சுமார் 2 கி.மீ நீளம் கொண்ட இந்த தீவின் நிலபரப்பு 390  ஏக்கர் ஆகும் . இந்த தீவில் ஆகாஷ் , அக்னி , அஸ்ட்ரா , பிரம்மோஸ் , நிர்ர்பாய் ,பிரஹார் , பிரித்வி , ஷாரியா , மேம்பட்ட விமான பாதுகாப்பு மற்றும் பிரித்வி ஏர் பாதுகாப்பு போன்ற சோதனைகள் நடந்துள்ளன . இந்தியாவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை சோதனை தளமாக வீலர் தீவு அமைந்து வந்தது .


27 ஜூலை 2௦17 அன்று ஒடிசாவில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார் . அதன்பின் வீலர் தீவிற்கு அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்டுவது தொடர்பான அரசாணையின் நகலை முதல்வர் பட்நாயக்கிடம் வழங்கப்பட்டது .


மேலும் நினைவஞ்சலியில் பேசிய முதல்வர் பட்நாயக் , அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவில் அனைவாராலும் நேசிக்கப்பட்டவர் . அவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போது சாந்திப்பூர் மற்றும் வீலர் தீவில் தான் அதிகம் தங்கி பணியாற்றி வந்தார் . இந்திய ஏவுகனை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியில் அயராது உழைத்தவர் . மேலும் 1993 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்களின் கோரிக்கையை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க வீலர் தீவை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கினார் பிஜூ பட்நாயக் என்று கூறினார் .


அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை சோதனைகளில் பணியாற்றினாலும் , அவர் அனுபவித்த இயற்கையான கடல் சார்ந்த சூழல்களால் பல கவிதைகளை அவரின் மை ஜர்னி என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் .


இறந்தும் மக்கள் மனதில் வாழும் ஒப்பற்ற மனிதர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவகம் இராமேஸ்வரத்தின் பேய்க்கரும்புஎன்ற இடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது .

சுருக்கமாக

ஒடிசாவில் உள்ள வீலர் தீவு இனி கலாம் தீவு என்று அழைக்கப்படும் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க