YouTurn

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் மாதம் ரூ3.5 லட்சம் எனப் பரவும் வதந்தி ! 

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் மாதம் ரூ3.5 லட்சம் எனப் பரவும் வதந்தி ! 

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ICELAND-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுதுள்ளது.




Facebook link 

விரிவான விளக்கம்

ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தினால் அந்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் ரூ.3.5. லட்சம் பணம் வழங்க ஐஸ்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக ஒர் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.




Facebook link 

https://twitter.com/Gangai_twit/status/1605917820222857217

Archive link 


உண்மை என்ன ?


ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்களுக்குப் பணம் தருவதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். 




Archive link 

'Iceland monitor' என்ற இணையதளத்தில் 2018, அக்டோபர் 8ம் தேதி இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Icelandic government does not pay men to marry Icelandic women” எனத் தலைப்பிடப்பட்ட அச்செய்தியின் தலைப்பிலேயே, ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கு அரசு பணம் அளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




Archive link

மேலும், இந்த தகவல் 2016ம் ஆண்டு முதலே இணையத்தில் பரப்பப்பட்டு வரும் வதந்தி என்றும், பலரும் இதனை உண்மை என நம்பி வருவதாக 2016 ஜூலை மாதம் Iceland monitor செய்தி வெளியிட்டுள்ளது. ஐஸ்லாந்து அரசு இணையதளத்தின் திருமணம் குறித்த பதிவிலும் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.




Archive link 

அடுத்ததாக ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ள தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். ஐ.நா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 'Statistics Times' என்ற இணையதளம் தரவுகளை வரிசைப்படுத்தியுள்ளது.



அதன்படி 2021ல் 100 பெண்களுக்கு 100.96 ஆண்கள் ஐஸ்லாந்து நாட்டில் உள்ளனர். வயது வாரியாக பார்க்கையிலும் கணிசமான அளவு ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது.


மேலும் படிக்க : எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்யச் சட்டமா ?


இதே போல, எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனச் சட்டம் நிறைவேற்றியதாக மாலை மலர், சமயம், தினத்தந்தி பொய்யான செய்தியை வெளியிட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.


முடிவு : 


நம் தேடலில், ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அந்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு ஆண்களுக்கு மாதம் 3.5 லட்சம் பணம் தருவதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க