YouTurn

தெலுங்கானாவில் இந்துக்களின் வீட்டில் முஸ்லீம்கள் புகுந்து தாக்குவதாக பரப்பப்படும் பாகிஸ்தான் வீடியோ

தெலுங்கானாவில் இந்துக்களின் வீட்டில் முஸ்லீம்கள் புகுந்து தாக்குவதாக பரப்பப்படும் பாகிஸ்தான் வீடியோ

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இது நடப்பது பாகிஸ்தானில் இல்லை. தெலுங்கானாவில். இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக நுழைகின்றனர் போராளிகள். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடாமல் செய்து விட்டனர். இதுதான் இன்றைய நிலை.



Twitter link 

விரிவான விளக்கம்

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக முஸ்லீம்கள் புகுந்து தாக்குவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக பலர் நுழைவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடியபோது, இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நடந்த நிகழ்வு என அறிய முடிந்தது. பாகிஸ்தானின் ஹைதராபாத் என்ற பகுதியில் அசோக் குமார் என்ற நபர் மீது இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிப்பு செய்ததாக கூறி போலியான புகார் ஒன்றை பிலால் அப்பாஸி என்ற உள்ளூர் கடைக்காரர் காவல்துறையில் அளித்துள்ளதை அடுத்து கும்பல் தாக்குதலை நடத்தி உள்ளதாக ஆகஸ்ட் 22ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



ஆகஸ்ட் 21ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் "Hyderabad Saddar mobile market" எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோவில் முழுமையான காட்சி பதிவாகி இருக்கிறது.



மேலும், ஆகஸ்ட் 21ம் தேதி அசோக் குமார் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிந்து போலீஸ் ஹைதராபாத் முகநூல் பக்கத்தில் கைது செய்யப்பட்ட புகைப்படத்துடன் பதிவிடப்பட்டு உள்ளது.



பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹைதராபாத் நகரில் அசோக் குமார் என்பவரின் வீட்டில் இஸ்லாமிய கும்பல் நுழைய முயன்ற வீடியோவை இந்தியாவில் நடந்ததாக தவறாக வைரலாகி வருகின்றது.

முடிவு :

நம் தேடலில், தெலுங்கானாவில் இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக முஸ்லீம்கள் நுழைய முயன்றதாகப் பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. இது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க