YouTurn

எச்.ராஜாவை தவிர மற்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனப் போலி நியூஸ் கார்டு !

எச்.ராஜாவை தவிர மற்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனப் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது -அமைச்சர் கடம்பூர் ராஜு.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

முருகன் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு போலி நியூஸ் கார்டுகள் செய்தி நிறுவனங்களின் பெயரில் வைரலாக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாக போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் ஜூலை 21-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை தேடிப் பார்க்கையில் அமைச்சர் கடம்பூர் ராஜு புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது.



Facebook link | archive link  

" எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது; மதத்தை புண்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடம்பூர் ராஜு " கூறியதாக வெளியாகி இருக்கிறது. அதில், எச்.ராஜாவின் பெயரை வைத்து ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க