YouTurn

குடியிருப்பு பயன்பாட்டிற்கான வீட்டு வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதா ?

குடியிருப்பு பயன்பாட்டிற்கான வீட்டு வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

வீட்டு வாடகை செலுத்தும் போது 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவிப்பு.



Archive link 

விரிவான விளக்கம்

வீட்டு வாடகை செலுத்தும் போது அனைவரும் 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்து உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவினரும் அந்த தகவலை அதிகம் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.



உண்மை என்ன ?

ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரையின் படி, வணிக பயன்பாட்டிற்கான வீட்டு வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. ஆனால், அது வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்குமானது அல்ல.



அலுவலகம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக கட்டிடங்களின் வாடைக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது. ஆனால், இனி வீடுகளை வாடைக்கு எடுத்து வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு இருக்கிறது.

குடியிருப்புக் கட்டிடத்தை வாடைக்கு எடுத்து தனி நபரோ அல்லது நிறுவனமோ ஜி.எஸ்.டி கீழ் பதிவு செய்து இருந்தால், வாடகை தொகைக்கு 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும். இது வீட்டை வாடகை எடுத்து வசித்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு அல்ல என அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



முடிவு :

நம் தேடலில், வீட்டு வாடகை செலுத்தும் போது 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவிப்பு தவறாக பரவி உள்ளது. குடியிருப்பு வீட்டை வாடைக்கு எடுத்து வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கே வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடியிருப்புவாசிகளின் வீட்டு வாடகைக்கு அல்ல என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க