YouTurn

மருத்துவமனையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை !

மருத்துவமனையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


திருச்சியில் பிறந்த ஸ்டான் சாமி கிறிஸ்தவ பாதிரியார் ஆவார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்தபடி பழங்குடியினர் & தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல்

கொடுத்தவர். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் நேற்று மறைந்தார்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளரான தமிழகத்தைச் சேர்ந்த பாதர் ஸ்டேன் சுவாமி உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஜூலை 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக வலைதளவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஸ்டேன் சுவாமியின் நிலை என வயதான முதியவர் மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உண்மை என்ன ?


வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 மே மாதம் என்டிடிவி இணையதளத்தில் வெளியான செய்தியில், உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் சிகிச்சையின் போது 92 வயதான கைதியை அவரது மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைத்ததற்காக சிறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக " இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



புகைப்படத்திற்கு கீழே கொலை வழக்கு கைதி பாபுராம் சிங் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா டுடே உள்ளிட்ட பல செய்திகளில் 92 வயதான கைதி என பாபுராம் சிங் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



முடிவு :


நம் தேடலில், மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை. அந்த புகைப்படத்தில் இருப்பவர் 92 வயதான பாபுராம் சிங் எனும் கைதி. உத்தரப் பிரதேசத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.



ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க