YouTurn

ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எதிரான போக்கு மாறாவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடைக்காது என்றாரா அமித்ஷா ?

ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எதிரான போக்கு மாறாவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடைக்காது என்றாரா அமித்ஷா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது, பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் . இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மத்திய அரசு நிதி கிடைக்காது - அமித்ஷா



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழக அரசியல் வட்டாரத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்தி மொழி திணிப்பு பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து பேசுப் பொருளாக இருந்து வருகிறது. தற்போது இந்திய அளவில் சினிமா வட்டாரங்களிலும் இந்தி மொழி பற்றி கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் நிதி கிடைக்காது என அமித்ஷா கூறியதாக ஜெயா பிளஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ? 

உள்துறை அமைச்சர் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் நிதி கிடைக்காது எனக் கூறியதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.



Facebook link 

ஆகையால், ஜெயா ப்ளஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் ஆராய்கையில், "நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை " என மே 2-ம் தேதி வெளியான செய்தி மட்டுமே கிடைத்தது.



மே 2-ம் தேதி அமித்ஷா குறித்து வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என அமித்ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க