YouTurn

இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !

இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் - வினோஜ் ப செல்வம் பாஜக மாநில இளைஞரணி தலைவர்

விரிவான விளக்கம்

தமிழகத்தில் இந்தி திணிப்பிறகு எதிரான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கையில் இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்து மத்தியில் ஆளும் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருபக்க விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் என்பவர், இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனக் கூறியதாக நாரதர் மீடியா எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Facebook link | archive link





Twitter link | archive link 

உண்மை என்ன ? 

பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வைரலாகும் கருத்து உண்மையா எனத் தெரிந்து கொள்ள நாரதர் மீடியா முகநூல் பக்கத்தில் சென்று பார்க்கையில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியான நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், " இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் " என வினோஜ் ப செல்வம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. புகைப்படம், டிசைன் உள்ளிட்டவை வைரலாகும் படத்துடன் ஒத்துப்போகின்றன.



Facebook link | archive link  

செப்டம்பர் 8-ம் தேதி வினோஜ் ப செல்வம் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் போலியான நியூஸ் கார்டு குறித்து பதிவிட்டு இருக்கிறார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளத்தில் வைரலாகி மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.



Twitter link | archive link 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க