YouTurn

ஹெலிகாப்டர், ட்ரக் மோதிக்கொள்ளும் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

ஹெலிகாப்டர், ட்ரக் மோதிக்கொள்ளும் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பஞ்சாப் அமிர்தசரஸில் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரக் மோதி விபத்து



Facebook link | archive link 1 | archive 2

விரிவான விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் சாலையின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் றெக்கைகளில் ட்ரக் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ எங்கு நிகழ்ந்தது எனத் தேடிப் பார்க்க தீர்மானித்தோம்.





உண்மை என்ன ?

வைரலாக வீடியோவின் லிங்கை வைத்து Fake news debunker by InVID &Weverify மூலம் கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2020 ஜனவரி 25-ம் தேதியே இவ்வீடியோ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்துள்ளது. ஆனால், அப்பதிவுகளில் இந்தியாவில் நிகழ்ந்ததாக குறிப்பிடவில்லை.



Twitter link | archive link

மேற்கொண்டு தேடுகையில், 2020 ஜனவரி 21-ம் தேதி டெய்லி மெயில் இணையதளத்தில், பிரேசில் நாட்டின் ரியோ ப்ரான்க்கோ நகரில் சாலையில் இருந்த ஹெலிகாப்டருடன் மருத்துவ கழிவுகளுடன் சென்றுக் கொண்டிருந்த ட்ரக் மோதியதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.



ஜனவரி 19-ம் தேதி RC Channel எனும் யூடியூப் சேனலில் ஹெலிகாப்டர், ட்ரக் விபத்தின் 1.46 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. பிரேசிலில் நிகழ்ந்த விபத்தை இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்ததாக கிண்டல், கேலியுடன் தவறாக வைரல் செய்து வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க