YouTurn

இயற்கை பேரிடரில் ஹெலிகாப்டரில் காப்பாற்றப்பட்டால் கட்டணமா ?

இயற்கை பேரிடரில் ஹெலிகாப்டரில் காப்பாற்றப்பட்டால் கட்டணமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரிடரில் சிக்கிக் கொள்ளும் மக்களை காப்பாற்றி அழைத்து வரும் ஹெலிகாப்டர்களுக்கு GST வரியுடன் ரூ.3500 இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற செய்தி ANI நியூஸ் இணையதளத்தில் வெளியாகி பிற ஊடகங்களிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் இந்த...

பரவிய செய்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடரின் போது சிக்கிக் கொண்டவர்களை ஹெலிகாப்டரில் காப்பாற்றினால் ஒரு ஆளுக்கு இனி கட்டணம் 3,500 ருபாய். GST வரியும் சேர்த்து.. உத்தரகாண்ட் மாநிலத்தில் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் இப்படி அறிவித்துள்ளது. மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் இப்படி வசூலித்துக் கொள்ள அனுமதி கொடுத்து விட்டார்.

விரிவான விளக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரிடரில் சிக்கிக் கொள்ளும் மக்களை காப்பாற்றி அழைத்து வரும் ஹெலிகாப்டர்களுக்கு GST வரியுடன் ரூ.3500 இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற செய்தி ANI நியூஸ் இணையதளத்தில் வெளியாகி பிற ஊடகங்களிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் இந்த நடவடிக்கையால் பணம் இருப்பவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், பணம் இல்லாதவர்கள் இறக்க வேண்டும் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

ANI நியூஸ் வெளியிட்ட தகவல் தவறான செய்தி என்றும், அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். ஜூலை 4-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை இணைத்து “ மக்களை காப்பாற்றுவதற்கு பணம் ஏதும் வாங்கப்படாது “ என்று தெரிவித்து இருந்தார்.



அதில், முதல்வர் “ பேரிடரில் மக்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காப்பாற்ற பணம் பெற மாட்டாது. தர்சுலாவில் இருந்து பிதோராகரில் உள்ள குஞ்சி என்ற பகுதிக்கு செல்ல சாதாரண பயணிகளுக்கு ரூ.3,500 வசூலிக்கப்படும் “ என ட்விட்டரில் மேற்கோள்காட்டியுள்ளார்.

ஆனால், உத்தரகாண்ட் அரசு வெளியிட்ட ஜூலை 6-ம் தேதி அறிக்கையில் பேரிடரின் போது மக்கள் ஹெலிகாப்டரில் பயணிக்க கட்டணம் வசூலிக்கும் என்ற நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது என்று செய்தி வெளியிட்டது ANI.



இதற்கும் ஜூலை 15-ம் தேதி பதில் அளித்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங், “ எதுவும் திரும்ப பெறவில்லை. அப்பகுதியில் அவசரக் கால உதவிக்காக இரு ஹெலிகாப்டர்கள் நிலை கொண்டுள்ளதாகவும், அதே ஜூலை 4-ம் தேதி அறிக்கையில் பேரிடர் போன்ற அவசரக் காலத்தில் அழைத்து செல்ல பணம் பெறப்படாது என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. என் ட்விட்டரை முழுமையாக பார்க்குமாறு ” கூறியுள்ளார்.



உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் ஜூலை 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஹிந்தி மொழியில் இருந்துள்ளது. அம்மாநிலத்தில் பிதோராகரில் உள்ள ஜன்பாத்-ல் உள்ள பேரிடர் மீட்பு ஹெலிகாப்டரில் பயணிக்கும் சாதாரண பயணிகளுக்கு கட்டணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

“  ஹெலிகாப்டரில் பயணிக்கும் சாதாரண பயணிகளுக்கு கட்டணம் குறைக்கப்படுகிறது. 2500 ருபாய் நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் gst வரியும் சேர்த்து 3100 ருபாய் வசூலிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 6-ம் தேதி வெளியான அறிக்கையில், “ பேரிடரில் மீட்கும் மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் அல்லது மீட்பின் போது பணம் பெறுவது திரும்ப பெறப்படுகிறது “ என்று குறிப்பிடப்படவில்லை.



ஜூலை 15-ம் தேதி ஊடகத்திற்கு வெளியிட்ட அறிக்கையில், “ அரசு வெளியிட்ட அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் இல்லாத காலத்தில் ஹெலிகாப்டரில் பயணிக்கும் பயணிகளிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் “ என்று கூறியுள்ளனர்.

உத்தரகாண்ட் அரசு வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே இதுபோன்ற செய்தி பரவ காரணமாயிற்று.

சுருக்கமாக

அரசு வெளியிட்ட செய்தியின் கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் தவறாக கருத்தில் கொண்டதால் பேரிடரின் போது மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் என்ற தவறான செய்தி வெளியாகியுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.