YouTurn

ஞானவாபி மசூதி கிணற்றில் கிடைத்த சிவலிங்கம் எனப் பரவும் தவறான படம் !

ஞானவாபி மசூதி கிணற்றில் கிடைத்த சிவலிங்கம் எனப் பரவும் தவறான படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

300 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில் கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம்.



Archive link 

விரிவான விளக்கம்

300 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய பிறகு 12 அடி உயரமுள்ள சிவலிங்கம் கிடைத்துள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?  

16-ம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.










மேலும் படிக்க : காசி விஸ்வநாத் கோயில் – ஞான்வாபி மசூதி விவகாரம் நடந்தது , நடப்பது என்ன ?

வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில் ஞானவாபி மசூதியில் நடைபெற்ற ஆய்வில் வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிசங்கர் ஜெயின் எனும் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மசூதி வளாகத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.




ஆனால், குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று(ஃபவுண்டைன்) என ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் தெரிக்கப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவிற்கு, அந்த பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொழுகைக்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.



இதையடுத்து, ஞானவாபி மசூதியின் வளாகத்தில் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தும் போது கிணற்றுக்குள் சிவலிங்கம் இருப்பதாக பழைய வீடியோ ஒன்று செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. எனினும், இது தொடர்பான ஆய்வுகளுக்கு பிறகே முழுமையான தகவல் வெளியாகும்.


ஞானவாபி மசூதியில் தோண்டி எடுக்கப்பட்ட 12 அடி சிவலிங்கம் என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2015-ல் இந்து ப்ளாக் எனும் தளத்தில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாபா பூசண்டேஸ்வரர் கோயிலில் 12 அடி உயரமும், 12 விட்டமும் கொண்ட சிவலிங்கம் " என இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.




2019-ல் sanket tv எனும் சேனலில், ஒடிசாவின் 12 அடி உயர சிவலிங்கம் கொண்ட பாபா பூசண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பூஜை செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது.


முடிவு : 


நம் தேடலில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் கிணற்றில் கிடைத்த 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம் எனப் பரவும் புகைப்படம் தவறானது என அறிய முடிகிறது.










ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க