YouTurn

பாகிஸ்தானில் பெண்ணின் கல்லறையைப் பூட்டிய பெற்றோர்கள் எனத் தவறான செய்தியைப் பரப்பிய முக்கிய ஊடகங்கள் !

பாகிஸ்தானில் பெண்ணின் கல்லறையைப் பூட்டிய பெற்றோர்கள் எனத் தவறான செய்தியைப் பரப்பிய முக்கிய ஊடகங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெண் சடலங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை…கல்லறைகளுக்கு பூட்டு.. #RajNewsTamil #Pakistan



Twitter Link | Archive Link 

விரிவான விளக்கம்

பாகிஸ்தானில் பெண் சடலங்களைக் கூட விட்டுவைக்காமல் அதனைத் தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் நடந்து வருவதாக கூறிய செய்தி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், இந்தியாவின் பல முக்கிய செய்தி ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

https://twitter.com/Chanakiyan_v2/status/1652861094455648258

Archive Link

மேலும் அதில் பாகிஸ்தானில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மகளின் உடல் பலாத்காரம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காகவே கல்லறையை பூட்டி வைக்கின்றனர் என்றுக் குறிப்பிட்டு பச்சை நிற இரும்புக் கம்பிகளை கொண்டு பூட்டப்பட்ட கல்லறையின் புகைப்படம் தொடர்பான செய்திகள் ANI, NDTV, Times Now மற்றும் Times of India உள்ளிட்ட பல முக்கிய ஆங்கில ஊடகங்களாலும், விகடன், ராஜ் நியூஸ், IBC தமிழ்நாடு, செய்தி புனல் போன்ற தமிழ் ஊடகங்களாலும் வெளியிடப்பட்டுள்ளது.



Archive Link

மேலும் ராஜ் நியூஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "2020ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உகாரா எனும் இடத்தில் பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர் கையும் களவுமாக பிடிப்பட்டார். 2021ம் ஆண்டு குலாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் 18 வயது பெண்ணிற்கு இதே கொடுமை நடந்துள்ளது. இதன் காரணமாகவே பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளது.



Archive Link:

உண்மை என்ன?

பகிரப்படும் கல்லறையின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், Delhiite என்ற ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் காணப்பட்டது. அந்தப் பதிவின் மூலம் இந்தக் கல்லறையானது இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள மதன்னாபேட் என்னும் ஊரில் உள்ள தாராப்ஜங் காலனியில் உள்ள கல்லறை என்பதை அறிய முடிந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தன் தாயின் (Zaheda Begum) கல்லறையில் வேறு யாரையும் அடக்கம் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே முசாபர் அலி என்பவர் பூட்டு போட்டதாக அந்த வீடியோவின் மூலம் அறிய முடிந்தது.

https://twitter.com/delhiite_/status/1652681834193629184?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw

Archive Link:

இது தொடர்பாக மேலும் தேடியதில், சூர்யா ரெட்டி என்ற பத்திரிக்கையாளர் அந்த கல்லறை தொடர்பான சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர், “புதைக்குழியில் புதைக்கப்பட்ட 65 வயது பெண், 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் முசாபர் அலி, தவறாக பரவி வரும் தனது தாயின் கல்லறையின் புகைப்படத்தைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

https://twitter.com/jsuryareddy/status/1653086713672241152?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw

Archive Link:

வீடியோக்களில் காணப்பட்ட நபர்களைப் பற்றி தேடியதில், வைரலாகும் வீடியோவில் பிங்க் நிற உடையணிந்த நபர் சமூக சேவகர் அப்துல் ஜலீல் என அடையாளம் காண முடிந்தது. அவர் ஆல்ட் நியூஸ்-ன் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை அவரின் முகநூல் பதிவின் மூலம் அறிய முடிந்தது.



மேலும் பூட்டிய கல்லறையின் இருப்பிடத்தை Google Street View மூலம் தேடியதில் கல்லறையின் இருப்பிடத்தை இதன் மூலம் காண முடிந்தது.



இதன் மூலம் இது பாகிஸ்தானில் உள்ள கல்லறை இல்லை என்பதையும், ஹைதராபாத்தில் உள்ள கல்லறையின் புகைப்படம் என்பதை அறியாமலேயே ஆங்கில ஊடகங்களான ANI, Times Now மற்றும் Times of India ஆகியவை தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம்.



மேலும் இது தொடர்பாக தமிழ் செய்தி ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளின் தொகுப்பையும் கீழேக் காணலாம்.



முடிவு :

நம் தேடலில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் பூட்டிய கல்லறை, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கல்லறை, இது பாகிஸ்தானின் கல்லறை அல்ல. மேலும் இந்திய செய்தி ஊடகங்களில் சொல்லப்பட்டது போன்று இது பாகிஸ்தானின் நெக்ரோபிலியா வழக்குகளுடன் தொடர்புடையது அல்ல என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க