YouTurn

இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்கு உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறினாரா ?

இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்கு உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறினாரா  ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் - கோத்தபய ராஜபக்சே



Archive link 

விரிவான விளக்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாடே பெரும் சிக்கலில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியிலும், அரசிலும் உள்ளவர்கள் தங்கள் பதவிகளை ராஜினமா செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், " இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் " என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாக தந்திடிவி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ? 

இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறியதாக தந்திடிவி சேனலில் எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

மாறாக, "இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போரிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் - கோட்டபய ராஜபக்ச " என்ற செய்தி கார்டே ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது .



Facebook link 

மேற்காணும் நியூஸ் கார்டில், இந்தியாவின் விலைவாசியை பற்றி கூறியது போன்று போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி உள்ளனர். வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என தந்தி டிவி செய்தியும் தெரிவித்து உள்ளது.

முடிவு :

நம் தேடலில், இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் என கோத்தபய ராஜபக்சே கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க