YouTurn

இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு மதுரையில் கண்டுபிடிப்பு !

இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு மதுரையில் கண்டுபிடிப்பு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இன்று இந்தியா பல இன குழுக்கள் ஒருங்கிணைந்த தேசமாக விளங்குகிறது. சில தருணங்களில் இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என விவாதங்களும் எழும். இந்நிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் முதலில் குடியேறியவரின் வாரிசு உடைய ஜீன் கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளத்தில்...

பரவிய செய்தி

ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் மனிதனின் 70,000 வருடங்கள் மிக பழமையான M130 ஜீன் ரகம் மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடம் கண்டறியப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

இன்று இந்தியா பல இன குழுக்கள் ஒருங்கிணைந்த தேசமாக விளங்குகிறது. சில தருணங்களில் இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என விவாதங்களும் எழும். இந்நிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் முதலில் குடியேறியவரின் வாரிசு உடைய ஜீன் கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆய்வு :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இமுன்னோஜி(Immunology) துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் 2001-ம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய மனிதனின் M130 ரக ஜீனை கண்டறிந்தார். இந்த ஆய்வு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த ஆய்வின் பகுதியாக ஆய்வு இருந்துள்ளது.
மதுரைக்கு அருகே உள்ள ஜோதிமாணிக்கம் எனும் கிராமத்தில் உள்ள   விருமாண்டி என்பவரிடம் M130 ரக ஜீன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. " என்னுடைய ஆராய்ச்சி செயல்முறையில், விருமாண்டி உடைய ஜீன் ஆப்பிரிக்கா உடன் நேரடியாக பொருந்தி உள்ளது " என 2001-ம் ஆண்டு தம் ஆய்வு முடிவில் பச்சயப்பன் தெரிவித்து இருந்தார். தன்னுடைய ஆய்வானது " Nature Genetics " இல் வெளியிடப்பட்டது.

முதல் இந்தியன் :



" இந்தியாவில் M130 ஜீனை தவிர பழமையான குறியீடு வேறேதுமில்லை. இந்த வழியில், ஆப்பிரிக்காவில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனை அடையாளம் காண முடியும்.ஏனெனில், பிறகு குடியேறியவர்கள் இந்த ஜீன் குறியீட்டை கொண்டிருக்கவில்லை. இதுவே முதல் " இந்தியன் " என்பதற்கான ஆதாரம் " என பேராசிரியர் பச்சயப்பன் தெரிவித்து இருந்தார்.

2001-ம் ஆண்டில் கண்டுபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் 2003-ல் மதிப்புமிக்க பத்திரிகையான " Nature Genetics " இல் வெளியாகியது. 2008-ல் பச்சயப்பன் உடைய ஆய்வு குறித்த செய்திகள் இந்திய செய்தித்தளங்களில் வெளியாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு வெளியான செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆராய்ச்சி பற்றி டிஸ்கவரி சேனலில் " தி ஸ்டோரி ஆஃப் இந்தியா " எனும் நிகழ்ச்சி தொகுப்பில் வெளியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.

முடிவு :

பழமையான M130 ரக ஜீன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும்  விருமாண்டி உடைய டி.என்.ஏ-வில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. விருமாண்டி உடன் மொத்தம் 13 பேரை பேராசிரியர் பச்சயப்பன் குழுவின் ஆராய்ச்சி குழு கண்டறிந்து உள்ளனர்.

சுருக்கமாக

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியலாளர்களின் ஆராய்ச்சியில், மதுரை அருகே உள்ள கிராமத்தில் 13 பேரின் டி.என்.ஏ-வில் M130 ஜீன் ரகம் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். மேலும், இவர்களின் முன்னோர்கள் முதல் இந்தியன் என ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்து இருந்தனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…