
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

செங்கோட்டையில் ஏறியவர்கள் இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை என்றும், அருகே இருந்த மற்றொரு கோபுரத்தில் மற்றும் காலியான கம்பத்தில் நிஷான் சாகிப் என அழைக்கப்படும் சீக்கிய மதக் கொடியையும், விவசாய சங்க கொடி ஒன்றையும் பறக்க விட்டு உள்ளனர் என நாம் மீம்ஸ் வெளியிட்டும் சிலர் விரிவான பதிலைக் கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்திய தேசியக் கொடி :
செங்கோட்டை அருகே ட்ராக்டர் உடன் கூடி இருக்கும் போராட்டக்காரர்களின் நேரடி வீடியோ காட்சியில், தேசியக் கொடியுடன் இருக்கும் கோட்டையின் முழு பகுதியையும் காணலாம். அங்கு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொடிகளை ஏற்றிய கம்பம் காலியாக இருப்பதை காணலாம். கோட்டை சுவரின் மையப்பகுதியில் தேசியக் கொடி மட்டுமே பறந்து கொண்டு இருக்கிறது. மற்ற இருபுறமும் உள்ள கோபுரங்களில் கொடி ஏதுமில்லை.

ஏஎன்ஐ செய்தி தளம் வெளியிட்ட வீடியோவில், போராட்டக்காரர்கள் காலியாக இருக்கும் கொடி கம்பத்தில் ஏறி கொடியை ஏற்றுவதை காணலாம்.
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
Twitter link | Archive link
அதேபோல், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட வீடியோவிலும் தேசியக் கொடிக்கு முன்பாக இருக்கும் காலியான கம்பத்தில் கொடியை ஏற்றுவதை காணலாம். கோபுரத்திலும், காலியாக இருந்த கம்பத்திலும் கொடிகளை ஏற்றி உள்ளனர். இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை.
Red Fort is fully occupied by protestors now. The police is now climbing to remove the flag that was hoisted by the protesters.
(Express vide by Praveen Khanna) pic.twitter.com/yeCxPNjLvy
— The Indian Express (@IndianExpress) January 26, 2021
Twitter link | Archive link
காலிஸ்தான் கொடி சர்ச்சை :
Delhi: Flags installed by protestors continue to fly at Red Fort. #FarmLaws #RepublicDay pic.twitter.com/U0SZnTw4Wn
— ANI (@ANI) January 26, 2021
Twitter link | Archive link
போராட்டக்காரர்கள் ஏற்றிய கொடி காலிஸ்தான் இயக்க கொடி அல்ல. நிஷான் சாஹிப் என அழைக்கப்படும் சீக்கிய சமூதாயக் கொடியாகும். பொதுவாக, இது குருத்வாராவிற்கு வெளியேயும் ஏற்றப்பட்டு இருக்கும்.

இந்த ஆண்டின் குடியரசுத்தின அணிவகுப்பில் பஞ்சாப் மாநில ஊர்தியில் அதே சீக்கிய கொடியை இடம்பெறச் செய்துள்ளனர்.

மற்றொரு கொடி :
மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் மற்றொரு கொடி கிசான் மஸ்தூர் எக்தா கொடியாகும். கிசான் மஸ்தூர் எக்தா ஆனது போராட்டத்தில் பங்கு பெறும் பல்வேறு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பாகும்.
அதேபோல், செங்கோட்டை பகுதியில் இருந்த தீப் சித்து என்பவர் வெளியிட்ட வீடியோவில், இந்திய தேசியக் கொடி கீழே இறக்கப்படவில்லை என்றும், அவர்கள் கிசான் மஸ்தூர் எக்தா மற்றும் நிஷான் சாஹிப் ஆகிய கொடிகளை மட்டுமே ஏற்றியதாகக் கூறியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், டெல்லி விவசாயிகள் ட்ராக்டர் பேரணியின் போது போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக பரப்பப்பட்ட தகவல் தவறானது. இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி மற்ற கொடிகளை ஏற்றியதாக பரப்பப்படும் தகவலும் வதந்தியே. காலியாக இருந்த கம்பத்தில் மற்றும் கோபுரத்தில் கொடியை ஏற்றி உள்ளனர். நிஷான் சாஹிப் எனும் சீக்கிய கொடி முத்திரையை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.