YouTurn

இந்திய போர் கப்பலை தடுத்து நிறுத்தியதா துருக்கி கடற்படை? உண்மை என்ன?

இந்திய போர் கப்பலை தடுத்து நிறுத்தியதா துருக்கி கடற்படை? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரப்பப்படுவது தவறான தகவல்.

பரவிய செய்தி

“துருக்கி விதித்த 18 மணிநேர காலக்கெடுவை பொருட்படுத்தாமல் இந்திய போர் கப்பல் ‘Trikhand’ துருக்கியால் சிறப்புரிமையாக பார்க்கப்படும் மத்திய தரைக்கடல் வழியாக கிரீஸ் நாட்டை அடைந்தது. இது மோடி தலைமையில் இந்தியா வலிமையான நாடாக மாறியிருப்பதை காட்டுகிறது”

 

-       சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்


Link / Archive Link



image.png


Link

விரிவான விளக்கம்

கடலில் நிற்கும் போர் கப்பல், இந்திய பிரதமர், துருக்கி நாட்டின் அதிபர் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து, ‘மத்திய தரைக்கடலில் சவூதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளால் சிறப்புரிமை பார்க்கப்படும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இந்திய கடற்படையின் போர்க் கப்பல் ‘Trikhand’ பயணித்தது. இதனை கண்டித்து துருக்கி அக்கப்பலை திரும்பிச் செல்லும்படி 18 மணிநேரம் கெடு விதித்தது. ஆனால் இந்திய கப்பல் துருக்கியின் இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் அந்த கடற்பகுதி வழியாக சென்ற கிரீஸ் நாட்டை அடைந்தது. இது மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதற்கான மற்றொரு சான்றாகும்’ என்று சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் என்ற மோடி ஆதரவாளர் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பி வருகிறார்.


 

மேலும் இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்புப் போரால் காஸாவில் மக்கள் பசி பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்காக ‘SUMUD Flotilla’ என்ற இயக்கம் சர்வதேச அளவிலான சமூக செயல்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த SUMUD Flotilla அனுப்பும் உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வருகிறது. இவ்வாறு ‘SUMUD Flotilla’ கடல் வழியாக கொண்டு வரும் நிவாரண பொருட்களை மத்திய தரைக்கடலில் தடுக்க இஸ்ரேல் கடற்படைக்கு உதவி செய்ய இந்திய போர் கப்பல் சென்றதாகவும் அதனை துருக்கி நடுவழியில் தடுத்து நிறித்தியதாகவும் பரப்பப்படுகிறது.


image.png

 

உண்மை என்ன?

 

மத்திய தரைக்கடல் பகுதியில் இந்திய போர்க் கப்பலை துருக்கி கடற்படை தடுத்த நிறுத்தியது குறித்து இணையத்தில் தேடினோம். இந்திய ஊடகங்களில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் எந்தவொரு ஊடகத்திலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி வெளியிடப்படவில்லை.

 

‘இந்திய கடற்படை, மத்திய தரைக்கடல்’ போன்ற keywords கொண்டு தேடுகையில், இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவுகளை காணமுடிந்தது. அதன் படி, இந்திய கடற்படையும் கிரீஸ் நாட்டின் கடற்படையும் இணைந்து செப்டம்பர் 13 முதல் 18 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.


 

மேலும் ‘SUMUD Flotilla’ கடல் வழியாக கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை மத்திய தரைக்கடலில் தடுக்க இஸ்ரேல் கடற்படைக்கு இந்திய போர் கப்பல் உதவி செய்தது குறித்து தேடிய போதும் இதற்கு சான்றாக எவ்வித செய்தியையும் காணமுடியவில்லை


இது குறித்து அக்டோபர் 02ஆம் தேதி ‘Reuters’ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின் படி, ‘SUMUD Flotilla அமைப்பால் கொண்டு வரப்பட்ட நிவாரணங்கள் அடங்கிய 40 படகுகளும், கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 450 செயல்பாட்டாளர்களும் இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது’ என்று தெரிய வருகிறது. இதில் இந்திய போர்க் கப்பல் இஸ்ரேலுக்கு உதவியதாக எவ்வித குறிப்பும் இல்லை.


 

இதிலிருந்து இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் மத்திய தரைக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரப்பப்படுவது தவறான செய்தி என்பது தெளிவாகிறது.


முடிவு:

 

இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க